பலான பதிவு...கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும்

Monday, December 15, 2008

தாய்மார்கள், குழந்தைகள் இந்த இனைப்பினை திறக்கவேண்டாம். அப்புறம் என்னை திட்ட வேண்டாம். தமிழ்மணம் என் பதிவினை தள்ளிவைக்கும் வாய்ப்புகள் வேறு இருப்பதால்...ஹி..ஹி..யாரும் போட்டு குடுத்துறாதீங்க!



இன்னிக்கு எக்குத்தப்பா வலை மேஞ்சிட்டு இருந்தப்ப சிக்கினது இந்த தொடுப்பு. பார்த்தமா சந்தோசப்பட்டமான்ன்னு போய்ட்டே இருக்கனும்.....:)

இந்த மாதிரி நம்ம ஊர்ல எப்ப வரப்போகுதோ தெரியலை...ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்ம்ம்

சாய்ராம்....ம்ம்ம்ம்

Sunday, November 23, 2008

டோண்டுவும், செயமோகனும் ,செந்நாயும் பின்னே ஒரு வயித்தெறிச்சலும்....

Monday, November 17, 2008

நான் படிப்பதை நிறுத்தி வருடஙகள் ஆகிவிட்டது...அனேகமாய் படிப்பதில் இருந்து ரிட்டயர்மெண்ட் அறிவித்த ஒரே ஆள் நானாகத்தான் இருக்கும். கல்லூரி இறுதி நாளன்று ஒரு பெரிய பார்ட்டி வைத்து நண்பர்களிடம்...புதியவர்களுக்கு வழிவிடவும், தொடர்ந்து படித்துக் களைத்து(?) விட்டதாலும், நானொருவனே எல்லாவற்றையும் படித்துக்கிழிக்க வேண்டுமென்கிற பேராசை இல்லாததாலும்....இன்று முதல் படிப்பதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவன். இருந்த போதும் காசுக்காக காட்சிப் போட்டிகளில் விளையாடும் ரிட்டயர்ட் கிரிக்கெட்டர்களைப் போல அவ்வப்போது எதையாவது ஆர்வக் கோளாறால் படித்துத் தொலைத்து விடுகிறேன்.

முதலில் இந்த ஜெயமோகன் என்கிற எழுத்தாளரை முந்தாநாள் வரை நான் படித்ததேயில்லை,அந்த ஆள் மலையாள எழுத்துக்களை டிங்கரடித்து தமிழில் போனி செய்யும் ஆசாமியாத்தான் உருவகித்து வைத்திருந்தேன்.
இத்தனை பில்டப் எதுக்குன்னா...நேத்து நம்ம பெரியவர் டோண்டு, திரு.ஜெயமோகன் எழுதிய ஊமைச்செந்நாய் என்கிற கதையை பற்றி எழுதியிருந்தார்...நேரமிருந்து தொலைத்த படியால் படிக்கத்துவங்கினேன்.

பெரிசாய் கதையென ஒன்றுமில்லைதான் இல்லை, சம்பவங்களின் தொடர்ச்சியினை, ஒரு சின்ன புள்ளியில் இருந்து கோடிழுத்த மாதிரியாய் நீட்டிக்கொண்டே போயிருக்கிறார்....போகிற வழியில் அந்த கோட்டின் விளிம்புகளில் அலங்கார வில்லைகளை ஒட்டியதைப் போல விவரனைகள். முதல் வாசிப்பில் விவரனைகள் மட்டுமே தங்கியது, அடுத்த வாசிப்பில் உள்ளார்ந்த சமூக கீறலகளை அவதானிக்க முடிந்தது. ஒரு வேளை வருடக்கணக்கில் இந்த மாதிரியான கதைசொல்லிகளின் எழுத்துகக்ளை வாசிக்காததனால் ஒரு ஆச்சர்யம் வந்ததா, இல்லை உண்மையில் உணர்வுகளின் ஊடே கிழித்துப் பாயும் தீர்க்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை படித்துப் பார்த்துச் சொல்லுஙகள். தொடுப்புக்கு டோண்டுவின் பதிவில் போய் பாருங்கள்...ஹி...ஹி...ம்ம்ம்ம்

அடுத்து இன்றைக்கு மதியம் வண்டியோட்டிக்கொண்டிருந்த போது ஒரு எஃப்.எம் ரேடியோவில் கேட்டது, நிலையத்தின் பெயர் நினைவில்லை. அதுல ஒரு ப்ரோக்ராம்...,

எவனாவது எவளையாவது....டாவு கட்டனும்னு தோனிச்சுன்னா உடனே அங்கன போன் போட்டு அந்த அறிவிப்பாளர்கிட்ட அந்த புள்ளையோட பேரையும், அதோட போஃன் நம்பரையும் குடுத்துட்டு...அந்த புள்ளைக்காய் எப்படி ஃபீலாவுறோம்னு சொல்லிடனுமாம். உடனே அந்த காதல் தூதர்..அதாங்க அந்த அறிவிபபளரு....நேரலையிலயே அந்த புள்ளைய போஃன்ல கூப்ட்டு, இந்த மாதிரி இந்த மாதிரி..இவர தெரியான்னு மொதல்ல கேப்பாராம். உடனே அந்த புள்ளையும் ஆமா அவர தெரியும்னு சொல்லுச்சுன்னா...உடனே டகால்னு அந்த பயபுள்ள உன்ன நெனச்சே கெறங்கி கெடக்கான், என்னத்தா சொல்றன்னு இவரு கேப்பாராம். அந்த புள்ள மட்டும் தடுமாறி சிக்னல் கொடுத்தா கொண்டாடிருவானுங்களாம்...இல்லாங்காட்டி இந்த பயலுக்கு பெட்ட்ர் லக் நெக்ஸ்ட் டைம்னு சொல்லீருவாய்ங்களாம்.

அந்த வரிசையில...இன்னிக்கு ”நாய்னா” ஒரு பயபுள்ள...ஹாசினின்னு ஒரு பொன்னு பேரச்சொல்லி அந்த புள்ளய பாக்கும் போதெல்லாம் உள்ளார சுளுக்கெடுத்த மாதிரி ஃபீலிஙகாவுதுன்னு கதவிட்டான்...அவய்ங்களும் சரி அந்த புள்ளயாண்ட பேசுவோம்னு பேசுனாய்ங்க...அது ரொம்ப உசாரா நான் ஏற்கனவே கமிட் ஆய்ட்டேன்...சாரி பாஸ்னு..கூலா பீலாவுட...இந்த பக்கம் பய பங்ச்சராக...அறிவிப்பாளர் பெட்டர் லக்ன்ன்ன்ன்ன்ன்னு...சொல்லல்ல...

மளமளன்னு...ஆறேழு புள்ளங்க படம் வரிசயா மனசுல ஓடிச்சு...அடப்பாவிங்களா...ஒரு 15 வருசம் முன்ன்னால இந்த மாதிரி ப்ரோக்ராம் வச்சிருந்தா வரிசையா லிஸ்ட் வச்சி தெனம் ஒரு புள்ளைக்கு நூல்விட்டு பார்த்திருப்பேனேன்னு...வயித்தெறிச்சல்...என்னத்தச் சொல்ல...ஹி..ஹி...

சின்னப்பயலுக சண்டை....ம்ம்ம்ம்ம்

Thursday, November 13, 2008

ங்கொய்யால...பதிவு எழுதாமலா சுத்தீட்டு இருக்ற...இப்ப எழுதுவேல்ல...என்பது மாதிரியாய் தூண்டிய நிகழ்வு நேற்றைய சென்னை சட்டக்கல்லூரி வளாகத்தைய நிகழ்வுகள். சரி சீரியஸா ஒரு பதிவு எழுதுவோம்னு தமிழ்மணம் பக்கம் வந்தா அல்லாரும் கருத்து கந்தசாமியாய் பதிவெழுதி குவித்து விட்டபடியால்...அதை பெரிதாய் தொட்டுத்தொடர விருப்பமில்லை.

ஆதிக்க சாதி...அடிமை சாதிகளாய் வெளிச்சம் காட்டப்பட்டவர்கள் மோதிக்கொண்டிருக்கிறார்கள்...அவ்வளவே!

தலையிட்டாலும், இடாவிட்டாலும் அவர்கள் தலை உருளப்போவது உறுதியென்கிற நிலையில் போலீஸார் வேடிக்கை பார்த்தது இயலாமையின் நிதர்சனம்...

இத்தனை பிரச்சினை நடுவில் கல்லூரி முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்?

ங்கொய்யால...

நேற்று சக மாணவர்களை மனிதாபிமானத்துடன் தாக்கிய அந்த மாணவச்செல்வங்களுக்கு பின் வரும் பாடலை டெடிக்கேட் செய்கிறேன்....

அவளுக்காய்....ம்ம்ம்ம்ம்

Sunday, October 26, 2008



மாடிபடியின் வளைவொன்றில் மின்னல்கீற்றாய்...

எப்பவாவது என்னை நினைக்கறியா?

மறக்கமுடியுமா!...பொய்சொன்னேன்

தப்பு பண்ணீட்டேன்,நீயாவது போகாமலிருந்திருக்கனும்

மௌனமாய் வெறுமையாய் கொஞ்சம் எரிச்சலாய்....

நல்லாருக்கியா? - நான்

ப்ப்ப்ச் - அவள்

நீ ?

இருக்கேன்...

இன்னும் என் மேல கோவமாயிருக்கியா?

அதையெல்லாம் நான் அப்பவே மறந்துட்டேன்

என்னால உன்னை மறக்க முடியலைடா

தப்பு பண்ணீட்டேன்...தடுமாறினாள்

அவசரமாய் போய்ட்டு இருக்கேன்

எனக்கு வேலையில்லை நான் கூட வரவா?

ம்ம்ம்ம்...Too late

அர்த்தமாய் சிரிக்கிறாள்...

மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லு

சிரித்துக்கொண்டே கடக்கிறேன்...

மேலேறி திரும்பிப்பார்கிறேன்....

பார்த்துக்கொன்டு நின்றவளிடம்...

கையாட்டி கடந்து போனேன்.

ஹேய்...தீபாவளி...

நாட்ல பொருளாதார நெருக்கடின்றாய்ங்க, பங்குமார்க்கெட் பங்ச்சராய் எல்லாப்பக்கமும் காத்துப் போவுது, விலவாசி அரசியல்வாதியோட சொத்து மாதிரி அதிகமாய்ட்டே போவுது, டாலர் என்னடான்னா எகிறுதுன்றாய்ங்க ஆனாலும், ங்கொக்கா மக்கா...எங்கிட்டு திரும்பினாலும் கூட்டம், நம்ம பயல்ககிட்ட காசுகொட்டி கெடக்குதுன்னேன்.

நமக்கும் தீபாவளிக்கும் பெருசா சொந்தபந்தமெல்லாம் கெடயாது...பொங்கல்லதான் நம்ம கும்மியெல்லாம். ஆனாலும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கே...(என்னடா பெரிய வார்த்தையெல்லாம் எளுதறானேன்னு ஃபீலாவாதீங்க...கல்லாயணம் ஆன பயபுள்ளைகளுக்கு நான் எதைச்சொல்றேன்னு புரியும்,தெரியும்.)அதுகாக இந்த சம்பிரதாயத்துக்கெல்லாம் தலைவணங்கி வருசா வருசம் மொட்டையடிச்சிக்கறது உண்டு. ஆனா என்ன ஆனாலுஞ்சரி எனக்கு மட்டும் புது உடுப்பெல்லாம் வாங்க மாட்டேன். ஹைகமாண்ட் வாங்கீட்டு வந்து போட்டுக்கடான்னு மெரட்டுனாக்கூட எதனாச்சும் டகால்ட்டி வேலை காட்டி வம்பா பழசத்தான் போட்டுக்கறது.

இம்புட்டு வீம்பும், நானெல்லாம் தமிழன்ன்னு காட்டிக்கி்றதுக்காகத்தான்....ஹி..ஹி...

ஆனா நம்ம வூட்ல அப்டீல்லாம் இல்லை, பயபுள்ளைக ஒரு மாசம் முன்னாலயே ஏதோ ராக்கெட் ஏவுற கணக்கா கவுண்ட்டவுன் ஆரம்பிச்சிட்டாய்ங்க...பெர்ஃபெக்ட் கவுண்டவுனாக்கும்,இதுவரை ஒரு இடத்துல கூட ஒரு சின்ன தப்பு நடக்கல, என்ன எண்ணி எண்ணி கொடுக்கும்போது மட்டும் ஊருக்குள்ள எம்புட்டு பேரு கஷ்டப்படறாய்ங்க இப்படி பொறுப்பில்லாம செலவு பன்றமேன்னு உறுத்தும். ஆனாலும் இத்தகைய சந்தோசங்கள் தேவைப்படுது...சுத்தியிருக்கறவுங்கள சந்தோசப்படுத்தி பாக்கறது ஒரு சந்தோசந்தானே....

இந்த பதிவுல அத எளுதலாமான்னு தெரியல...ஆனா நான் பதிவெளுதற வேகத்துக்கு இந்த பதிவ விட்டா அப்புறம் இந்த மேட்டர் ஆறி பழசாயிரும்....ம்ம்ம்ம்

என்னாடா ரொம்ப பில்டப்புறேனேன்னு டென்சனாவாதீங்கோ...இந்த இலங்கை மேட்டர்தான் அது...நான் சொல்றது நெறயபேருக்கு புடிக்காதுதான், என்ன பண்றது, இத என் ப்ளாக்குல கூட ப்ளாக்கலைன்னா நான் வேற எங்கன போய் சொல்றது....

மக்கா...எங்கூருபக்கம் ஒரு பழமொழி சொல்வாய்ங்க...

உப்புத்தின்னா தண்ணி குடிச்சாவனும்....ராசீவ் காந்தி உப்பத்தின்னாரு, தண்ணிய குடிச்சாரு, அமைதிப்படை உப்ப தின்னுச்சு தன்னிய குடிச்சிச்சு, பிரேமதாசா உப்பத்தின்னாரு தண்ணிய குடிச்சாரு, லக்‌ஷ்மன் கதிர்காமர் உப்பத்தின்னாரு தண்ணிய குடிச்சாரு...இந்த வரிசையில பிரபாகரன் உப்பத்தின்னாரு இப்ப தண்ணிய குடிக்கறாரு, ராஜபக்‌ஷே உப்ப தின்னுட்டு இருக்காரு எப்பவாச்சும் கட்டாயமா தண்ணிய குடிப்பாரு....

ஆனா...இந்த வக்கத்த அப்பாவிச்சனங்க என்னய்யா பாவம் பண்ணுச்சு, புள்ளையுங்குட்டியுமா கொத்துக்கொத்தா செத்த்துப் போறாய்ங்களே..ஒரு பயலும் அதைப்பத்தி கவலைப்படல...தன் குண்டிக்கி கீழ நெருப்பு எரியும்போது மட்டுந்தான் அமைதின்றானுங்க, சமாதான தீர்வுன்றானுங்க, போர் நிறுத்தம்ன்றாய்ங்க...தமிழ்நாட்டுத்தமிழனெல்லாம் வரிச கட்டி நின்னு ஆதரவு தரணும்ன்றாய்ங்க. நான் ரெண்டுபேரயுந்தான் சொல்றேன்...புரியுதா!

உள்ளூர் அரசியல்ல பருப்பு வேகனுமேன்னு இன்ஸ்டண்ட் தமிழுனர்வு வந்து சுருசுருன்னு கெளம்பி இலங்கை தமிழனுக்காவ அரசியல் பண்றாய்ங்க....சரி அவய்ங்களுக்கு ஏதோ ஆதாயமிருக்குமாக்கும், நெனச்சா சினிமாவுல இருந்து செல சிந்தனை சிற்பிகளெல்லாம் கெளம்பி ராமேஸ்வரம் போய் ஒத்திகையில்லாம நடிச்சிட்டு வந்திருக்காய்ங்க...அதுல ரெண்டு பேர் மப்புல உளறி வச்சி இன்னிக்கு இலங்கை தமிழனுக்கு இன்னொரு நம்பிக்கை நச்சத்திராமாய்ட்ட கொடுமைய எங்கனன்னு போய்ச்சொல்லுவேன்.

இத்தன ட்ராமாவும் நடந்து என்னடா விளைவுன்னு பார்த்தா,அண்ண்ன் தீவாளி காசு வாங்கீட்டு வரச்சொன்னாருங்கற் மாதிரி ராஜபக்‌ஷேயோட தம்பி டெல்லிக்கு வந்து பல்லைகாட்டீட்டு நிக்கறார். இத்தன கூத்தும் இலங்கைல தெனந்தெனம் செத்து சுண்ணாம்பாவுறானே அவனுடைய நலனுக்கு ஒரு மயித்தயும் புடுங்கலை...இனியும் புடுங்கப்போறதில்லை.

பெரச்சினையோட அடியாளத்துல போய் பார்த்தம்னா இலங்கை அரசாங்கமுஞ்சரி, தமிழீழ விடுதலைப்புலிகளுஞ்சரி....ரெண்டு பேருமே யோக்கியமில்லை. ரெண்டுபேருக்குமே வாய்ச்சுத்தமுமில்லை....ரெண்டு பேருமே விட்டுக்கொடுக்கவிரும்பலை...ரெண்டு பேருக்குமே அமைதியிலயோ, சமாதானத்துலயோ, தன்ன நம்பியிருக்கற மக்களை பத்தின அக்கறையோ இல்லை. ஆக ரெண்டு பேருமே கடைஞ்செடுத்த காரியவாதிகள்...அறிவியல்ல என்ன சொல்றாய்ங்கன்னா எதிர் துருவத்த ஒன்னோட ஒன்னா ஒட்டவச்சிரலாம்...ஆனா ஒரே துருவத்த ஒன்னோட ஒனனா ஒட்ட வைக்க முடியுமா...

கொள்ளிக்கட்டைய வச்சி சமைக்கலாம்...இவய்ங்க அதவச்சி தலையச்சொறிவோம்ன்னு அலையும் போது நாம என்னத்தச்சொல்றது...

அதனால....

இப்பதைக்கு தீவாளிய கொண்டாடீட்டு அப்பாலிக்கா இந்த மேட்டர பத்தி மறுபடி யோசிப்போம்...ஏன்னா இது மெகாசீரியல் மாதிரி அத்தனை சீக்கிரத்துல முடிக்க மாட்டாய்ங்க, இந்த ட்ராமா போய்ட்டேதானிருக்கும்.

வெட்கக்கேடு....

Wednesday, October 15, 2008

உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தும், தண்ணீர் தரமறுத்த கர்நாடகாவின் அடாத செயலை தட்டிக்கேட்டு கூண்டோடு ராஜினாமா செய்ய துப்பில்லாதவர்கள்....

முல்லைப் பெரியாற்றுப் பிரச்சினையில் கூண்டோடு ராஜினாமா செய்ய வக்கற்றவர்கள்....

கர்நாடகமெங்கும் சக தமிழன் விரட்டி விரட்டி அடிக்கப்பட்ட போது கூண்டோடு ராஜினாமா செய்யும் சொரணையற்றவர்கள்....

இப்போது கூண்டோடு ராஜினாமா செய்கிறார்களாம்...

வெட்கக்கேடு...

இன்னிக்கு ஆயுத பூசை......

Tuesday, October 7, 2008



எல்லாரும் கும்புட்டுங்கங்கப்பேய்....

நோ தங்கமணி என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய் !

Saturday, September 27, 2008

ஆசிஃப் அலி சர்தாரி H/O பெனாசீர் புட்டோ, அந்த அம்மா மண்டைய போடங்காட்டி, சைக்கிள் கேப்ல பாக்கிஸ்தானுக்கு அதிபரான, பணக்காரவூட்டு புள்ளையான சர்தாரி வயசுல பெரிய சோக்காளியாம்.அதாங்க அந்த ஊரு மல்லுவேட்டி மைனர்.



வூட்டுக்காரம்மா போய்ச்சேர்ந்த சோகத்துல கொஞ்சநாள் சோகமாருக்கற மாதிரி டகால்ட்டி வேலையெல்லாம் காட்டீட்டு மனுசன் இப்ப பூந்து வெள்ளாட்றார், சமீபத்துல...அட நம்புங்க மெய்யாலுமே சமீபத்துல அமெரிக்கா போன இடத்துல சாரா பாலின், அதாங்க துனை ஜனாதிபதிக்கு நிக்கிறாங்களே,(ஹூம்ம்ம்ம்ம்...இந்த இடத்தில் எனது பெருமூச்சினை பதிந்து வைக்கிறேன்), அந்தம்மா ஒரு மருவாதிக்கு மீட்பண்ண வந்தா நம்ம மைனர் குஞ்சு இன்னா மாதிரி ப்ராக்கட் போடறார் பாருங்க....

சாரா...என்னா மாதிரி வழியுது பாருங்க....நமக்கில்லை...நமக்கில்லை...

நெஞ்சத்தொட்டு சொல்லுங்க யார் பெஸ்ட்...!

Friday, September 26, 2008

எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த இரண்டு ஒளித்துண்டுகளையும் பாருங்கள். பார்த்து/கேட்டு விட்டுச் சொல்லுங்கள்....யார் பெஸ்ட்.






அமைதியான பின்னிரவில்....மொட்டை மாடியின் தனிமையில், தலைமாட்டில் இந்த பாடல் மெலிதாய் ஒலிக்க நட்சத்திரங்களை எண்ணிய நாட்கள் மட்டும் திரும்ப கிடைக்குமானால் நான் எதுவும் செய்ய தயாராக இருக்கிறேன். அத்தனை பொக்கிஷமான தருணங்கள்....

சுசீலாவும் , லதாவும்...கொஞ்சம் கொஞ்சமாய் உயிர்வரை ஊடுருவும் குரல் ராட்சசிகள்....ஒரு அதி காலையில் விழுப்புரம் அர்ச்சனா உணவகத்தில்,திருமதி.சுசீலாவை நேரில் கண்ட மாத்திரத்தில் கொஞ்சம் தடுமாறி, செய்வதறியாது காலைத்தொட்டு வண்ங்கிய போது அந்த தேவதை முகத்தில் காட்டில பெருமிதமான சிரிப்பும், என் தலையை தொட்டு நல்லாயிருங்க என சொன்ன வார்த்தைகளும்....வாழ்நாளைக்கும் போதும்.

இம்புட்டு நாளா இது தெரியாம போச்சே...!

Wednesday, September 24, 2008

இன்றைக்கு எக்குத்தப்பாய் கையில் சிக்கிய அரவிந்தரின் ஒரு புத்தகத்தை அப்டீக்கா மேலாப்ப்ல மேஞ்சிட்டு இருந்தப்ப ஒரு மேட்டர் பச்சக்குன்னு மனசுல ஒட்டுச்சு, வலையுலக தர்மத்தின் படி உடனடியா அதை சபையில வைக்கிறேன்....படிச்சுப்பாருங்க....

“மெய்யான கல்வியின் முதலாவது அடிப்படைக் கொள்கை, எதையும் கற்பிக்க முடியாது என்பதேயாகும். ஆசிரியர், பாடங்களை எடுத்துச் சொல்லும் அறிவுரையாளரோ, வேலை வாங்கும் மேலாளரோ அல்லர், அவர் உதவியளித்து வழிநடத்துபவர் ஆவார். கருத்துக்களைச் சுட்டிக்காட்டுவதே அவருடைய பணியாகும், அவற்றை வலிய சுமத்துவதன்று.உண்மையில் ஆசிரியர் மாணவனின் மனத்துக்குப் பயிற்சியளிப்பதில்லை, மாணவன் தன் அறிவு சாதனங்களை எவ்வாறு செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பதை அவனுக்குக் காட்டி, அதில் அவனுக்கு ஆதரவளித்து ஊக்கமூட்டுகிறார். அவர் மாணவனுக்கு அறிவை கொடுப்பதில்லை.அவன் எவ்வாறு தன் முயற்சியால் அறிவை எய்தக் கூடும் என்பதை அவனுக்கு காண்பிக்கிறார்.ஆசிரியர் உள்ளிருக்கும் அறிவை வெளிக்கொணர்வதில்லை; அறிவு எங்கே புதையுண்டு கிடக்கிறது என்பதையும், அதை எவ்வாறு மேற்பரப்பிற்கு அடிக்கடி எழுந்து வருமாறு பழக்கப்படுத்தலாம் என்பதை அவர் அவனுக்கு காண்பிக்கிறார்”


- ஸ்ரீ அரவிந்தர்


இப்ப மேட்டருக்கு வருவோம்...இந்த சமாச்சாரம் இவ்வளவு நாளா எனக்கு தெரியாததால நாந்தான் மக்கோன்னு நினைச்சிட்டு இருந்தேன்...இப்பத்தான் புரியுது, தப்பு நம்ம மேல இல்லை நமக்கு சொல்லிக்குடுத்த புண்ணியவான்களோட கைங்கர்யந்தான்னு...

ஹி....ஹி...

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே....

Friday, September 19, 2008

ஆடிக்கொன்றும் அம்மாவாசைக்கொன்றுமாய் பதிவெழுதுவதே எனக்கு வழக்கமாய் போய்விட்டது. நான் பதிவெழுதாவிட்டால் ஒன்றும் குறைந்து விட போவதில்லைதான், ஆனாலும் உள்ளேன் ஐயா என பின்வரிசையில் இருந்து குரல் கொடுக்கவாவது அவ்வப்போது இந்த மாதிரி எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

வர வர தமிழில் பெண்பதிவர்கள், பதிவெழுதுவதை குறைத்துக் கொண்டே வருகிறார்கள் என்பது என்னுடைய அவதானம். இப்படியே போனால் பதிவுலகில் பெண்பதிவர்களே இல்லாமல் போய்விடும் ஆபத்தினை இந்த நிலையிலாவது உண்ர்ந்து புதிய பழைய பெண் பதிவர்களை ஊக்குவிப்பதாய் சபதமெடுத்திருக்கிறேன். அதற்காக நீங்கள் யாரேனுமென்னை ஜொள்ளு பார்ட்டி என கேலி செய்தாலும் கவலையில்லை.

நம்ம பரிசல் மாதிரி ஒரு சோப்பு பதிவு போடுவோமென்றுதான் இந்த பதிவினை துவக்கினேன், ஆனால் சம்மந்தப்பட்ட பார்ட்டி இந்த பக்கமெல்லாம் வருவதில்லை என்பதால் ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு செய்தியை மட்டும் இந்த இடத்தில் பதிந்து வைக்க விரும்புகிறேன். சிங்கத்தை கூண்டுல அடைச்சி இன்னியோட பன்னிரெண்டு வருசமாச்சு...ம்ம்ம்ம்

இந்த இடத்தில் ஒரு பாட்டு....



அருமையான பாட்டு....இந்த மாதிரியான சிக்கலான இசை கட்டமைப்போடு இப்போதைய பாடல்கள் வருவதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. சம்மந்தப்பட்ட பார்ட்டிக்கு ரொம்பவும் பிடித்த பாட்டு இது, இன்றைக்கு கோவிலுக்கு போய்விட்டு வரும்போது இந்த பாடலினை கண்ணை மூடி ரசித்துக் கொண்டே வந்தார், பார்க்கவே சந்தோஷமாயிருந்தது...வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்....

குன்னக்குடி வைத்தியநாதன் மரணம்....

Monday, September 8, 2008


வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் சற்றுமுன் காலமானார். அன்னாருக்கு வயது 73. இன்று இரவு மருத்துவமனையொன்றில் உடல்நலக்குறைவின் காரணமாய் காலமானார்.



தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்....

Thursday, August 28, 2008

இன்று மாலை லக்கிலூக்கின் பதிவில் பதிவர் அனுராதா அவர்களின் பிரிவு பற்றி அறிந்த கணத்திலிருந்து உறுத்திக் கொண்டிருந்த ஒன்றினையே தமிழ்மண நிர்வாகத்திற்கு வேண்டுகோளாய் இந்த பதிவின் மூலமாய் வைக்கிறேன்.

சக பதிவர்களின் அங்கீகரிப்புகளையும், வெற்றிகளையும் தன் முதல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு அதனை தன் பயணச்சுவட்டில் பதிந்து வைக்கும் தமிழ்மணம், தளரா நெஞ்சுறுதியுடன் காலனை எதிர்த்து தன்னந்தனியாய் போராடிய அந்த தாய்மையின் பிரிவினையும் அவர்பால் சக பதிவர்கள் கொண்டிருந்த அக்கறையையும் தமிழ்மண வரலாற்றில் பதிவது அவசியமென படுகிறது. இதனை ஒரு வேண்டு கோளாய் ஏற்று அண்ணாருக்கு சக பதிவர்களின் அஞ்சலியினை பதியும் விதமாய் தமிழ்மண முகப்பில் ஒரு அறிவிப்பினையும் ஏற்பாடினையும் செய்யலாம்.

யோசியுங்கள் நண்பர்களே...

கின்னஸ் சாதனையை நெருங்கிக்கொண்டிருக்கும் தமிழன்...

Wednesday, August 27, 2008


சென்னையின் FM ரேடியோக்களில் BIG FM ம் ஒன்று...இதில் ஸ்பீட் தீனா என்கிற RJ ரொம்பவே பிரபலம். முதலில் சூரியன் FM ல் இருந்த மனிதர், தனது அறுவை ஜோக்குகளால் பிரபலம். ப்ளேட் தீனா என கலக்கிக் கொண்டிருந்தவர், சென்னைக்கு ரிலையன்ஸ் குழுமத்தில் BIG FM வந்த போது அதன் ஸ்டார் RJ ஆனார்.

இதற்கு முன்னரே ஒரு தடவை தொடர்ச்சியாய் இடைவெளியில்லாமல் இரண்டு மூன்று நாட்கள் நிகழ்ச்சிகளை வழங்கி சாதனை படைத்த இந்த இளைஞர் இப்போது கின்னஸ் சாதைனையை முறியடிக்கும் முயற்சியில் தற்போது ஏறத்தாழ தனது இலக்கினை நெருக்கிக் கொண்டிருக்கிறார். நாளை காலை இந்திய நேரப்படி ஐந்து மணிக்கு தனது சாதனையை நிறைவு செய்கிறார். இவரது இந்த சாதனையை வெப் கேமரா மூலம் லைவ் ஆக ஒளிபரப்புகிறார்கள். இந்த இனைப்பில் அதனை பார்வையிடலாம்.

சக தமிழன் ஒருவனின் அசாத்திய மன உறுதியை...வாழ்த்துவது நம் அனைவரின் கடமை..

வாழ்த்துகள் தீனா...

எழுதத்தான் நினைக்கிறேன்....

Tuesday, August 26, 2008

எழுதுவதை மறந்து விடக்கூடாதென்பதற்காய் இந்த பதிவு....சொல்லத்தான் நினைக்கிறேன் மாதிரி இது எழுதத்தான் நினைக்கிறேன்.

இலக்கின்றி எழுதுதல் என்பது இலகுவான ஒன்று, எவ்வித முன் தயாரிப்புமின்றி தோன்றுவதையெல்லாம் எழுதலாம்...அதாவது நல்ல நகைச்சுவையை கேட்ட மாத்திரத்தில் வாய்விட்டு சிரிப்பதைப்போல,.அத்தகைய செயலில் பாசாங்கிருக்காது அல்லவா?

எனது கடைசி பத்து பதிவுகளில் மூன்று விமர்சன பதிவுகள் அதுவும் என் சகபதிவர்களை சகட்டு மேனிக்கு காட்டு காட்டென காட்டிய பதிவுகள், அந்த கணத்தில் ஏற்பட்ட உணர்வுகளின் உந்துதலால் அப்படி எழுதவேண்டியதாயிற்று. இப்போது தோன்றுகிறது, அப்படி எழுதியதில் எனக்கு மகிழ்ச்சியில்லையென்று...யாரேனும் காயப்பட்டிருப்பார்களேயானால் அவர்களுக்காய் எனது வருத்தத்தினை இந்த இடத்தில் பதிந்து வைக்கிறேன்.

இப்போதைய எனது பிரச்சினை நேரம்தான்....எப்படித்தான் சமாளிக்கிறேன் எனபது இது வரை எனக்கு புரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம், எதையும் திட்டமிடுவதில்லை, எல்லாம் தானாய் போகிறது, எத்தனை நாளைக்கு இப்படி சர்க்கஸ் வித்தைக்காரன் மாதிரி ஓடிக்கொண்டிருக்கப் போகிறேனோ தெரியவில்லை.

எங்காவது மலைவாசஸ்தலத்தில் ஆளில்லாத தனிமையான வீட்டில், தேனீர் கோப்பையின் துனையுடன், பள்ளத்தாக்கின் அழகை பருகியபடியே நிறைய எழுத ஆசையாயிருக்கிறது...வாய்க்குமா தெரியவில்லை.

இப்போதெல்லாம் தமிழ்வலைப்பதிவர்களில் காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது...ம்ம்ம்ம்ம், எத்தனை பேருக்கு மதுரா என்கிற பதிவரை தெரியும்?

என்னை பொறாமைபட வைத்த வார்த்தை பிரயோகங்கள், திருடிக்கொள்ள நினைத்த எழுத்து நடை, முயற்சித்தும் பார்த்தேன் முடியவில்லை, அருமையான எழுத்துக்கும் கருத்துக்கும் சொந்தக்காரி,....

சில அரைவேக்காட்டு பதிவர்களால் தனது தமிழ் பதிவினையே அழித்து விட்ட அருமையான தமிழ் பதிவர் அவர். இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே பதிவிடுகிறார்.

டெல்பின், காட்டாறு, உஷா ராமசந்திரன்...இவங்களை எங்காவது யாராவது பார்த்தா நான் கேட்டதா சொல்லுங்க.....விவேக் சொல்ற மாதிரி எனக்கு அவிங்களை தெரியும்....அவிங்களுக்கு என்னை தெரியாது..!

குசேலன் குப்புற விழுமென எதிர்பார்த்ததுதான்...ஆனால் இந்த இடறலில் தசாவதாரம் வெற்றிப்படம் என சொல்வதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை. தனிப்பட்ட முறையில் வர்த்தக ரீதியாய் தசாவதாரம் முதலுக்கு மோசமில்லைதான், குசேலனால் எட்டு லட்ச ரூபாய் வரை நஷ்டம்...முப்பது சதவிகிதம் திரும்ப தருவதாய் சொல்லியிருக்கிறார்கள்.....கையில் வந்தால்தான் உறுதி....பார்ப்போம். பேராசை பெருநட்டம் என்பது ரஜினி விசயத்தில் இரண்டாவது முறையாய் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

பரிசல் பழைய பாஃர்மில் எழுத ஆரம்பித்து விட்டார். சந்தோஷம்தான்...அவரின் சமீபத்தைய சோப்பு பதிவு அருமை.....ஹய்யடா, நம்மள மாதிரியே ஒரு ஆள்னு சந்தோசமாய்ட்டேன். ஆனால் நான் பரிசல் அளவுக்கெல்லாம் நீட்டி முழக்கியிருக்க மாட்டேன். ஒரே வரியில ஹைகமாண்ட்டை ஃப்ளாட் ஆக்கீருப்பேன். அந்த மேஜிக் வார்த்தை....”நீயல்லால் தெய்வமில்லை”....ஹி..ஹி...

அம்மணி இந்த பக்கம் வர்றதில்லைங்கிற தைரியத்துல என்னோட சீக்ரெட் வெப்பனை உங்க பார்வைக்கு வச்சிருக்கேன்.புத்திசாலிங்க யூஸ் பண்ணி சந்தோசமா இருங்க. வரும் காலங்களில் பரிசல் இதைக் காட்டிலும் அருமையான பல சோப்புகளை தயாரித்திட வாழ்த்துகிறேன்.

பரிசலின் எழுத்துக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்...இதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது சமீபத்தைய பதிவுகள், நேயர் விருப்பம் மாதிரி அவரின் ரசிகர்களை குஷிப்படுத்த எழுதப்படுவதற்காகவே எனக்கு தோன்றுகிறது.இது சரியா, தவறா என்பதை அவரின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.

எழுத நினைச்ச எல்லாத்தையும் இப்பவே எழுதீட்டா அடுத்த பதிவெழுத மேட்டருக்கு எங்க போவேன்....அதுனால இப்பதைக்கு இங்கன வுட்ரேன் ஜூட்....

பரிசல்காரனுக்கு ஒரு மனம் திறந்த மடல்....

Wednesday, August 13, 2008

அன்பின் மொக்கைச்சாமி !

இந்த பெயர் எனக்கு பிடித்திருக்கிறது....உங்களுக்கு ஆட்சேபனையிருந்தால் மன்னித்து விடுங்கள்.....

நேற்றைய எனது பதிவு எந்த வகையிலும் உங்களையோ உங்களின் எழுத்துப் பணியினையோ களங்கப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை.சக பதிவன் என்கிற முறையில் உங்களின் எழுத்து மற்றும் எண்ண சுதந்திரம் எந்தவொரு மூன்றாவது சகபதிவரால் அறிவுரை என்கிற பெயரில் கே(ள்வி)லிக்குள்ளாக்கப்பட கூடாது என்கிற ஆத்திரத்தின் எதிரொலியே....

இங்கே பதிவெழுதுகிற யாரும் பால்மணம் மாறா பச்சைக்குழந்தைகளில்லை, எல்லோரும் தங்கள் எல்லைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்தவர்களே....சுய சிந்தனையுடன் எவ்வித புற அழுத்தமுமில்லாத படைப்பாளிகள் என்று கூட பெருமையாகக் சொல்லிக்கொள்ளலாம்.

என்னுடைய அனுபவத்தில் நிறைய பதிவர்கள் பதிவெழுதத் துவங்கிய பொழுதில் இருந்த வேகமும் உற்சாகமும் போகிற போக்கில் மங்கிப் போய் ஒரு கட்டத்தில் காணாமலே போய்விட்டார்கள்.இதற்கு நிறைய உதாரணஙகளைச் சொல்லமுடியும். அப்படியான ஒருவராக நீங்கள் ஆகிவிடும் ஆபத்தினை நான் இன்னமும் எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் என்னுடைய நெருங்கிய நண்பராக இருக்கும் பட்சத்தில், நீங்களும் என்னை அவ்வாறாகவே கருதும் சூழலில் உங்கள் நிறைகளை நான் சபையில் பெருமையாக பேசவேண்டும், அது நான் உங்களின் நட்புக்குச் செய்கிற மரியாதையாக இருக்கும். பரஸ்பரம் இருவருமே நெகிழ்ந்து போகிற உன்னதமான தருணமாயிருக்கும்.

அதே நேரத்தில் உங்களின் குறைகளை தனிமையில் உங்களுக்கு மட்டுமே உறைக்கிற மாதிரி இதை விட காட்டமாய், ஏன் முகத்திலறைந்தார் போல சொல்லுவேன்...சொல்லவேண்டும்...அதுதான் நட்பு. மாறாக உங்கள் குறையகளாக நான் கருதுகிறவைகளை சபையில் பகீங்கரமாய் எல்லார் முன்னாலும் போட்டுடைத்து அதனால் இனிமேல் நீ இப்படி நடந்து கொள் என புத்தி சொல்வது எந்தவகை நட்பின் இலக்கணம் என்பதை உங்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்....ஆனால் பெருந்தன்மையாய் அந்த அறிவுரையினை ஏற்றுக்கொண்ட பாங்கில் என் மதிப்பில் நிறையவே உயர்ந்துவிட்டீர்கள் மொக்கச்சாமி!

நாமனைவரும் தவறு செய்வது தவிர்க்கமுடியாதது....நம்மில் யாரும் புனிதரில்லை, இடறிவிழும் வாய்ப்புகள் எல்லோருக்கும் உண்டு. ஆனால் நட்பின் பெயரால் தனிமனிதனின் சுதந்திரமும், அவனது நிதர்சனங்களும், எல்லைகளும் பகீங்கரமாக பொதுவில் கிழித்து தொங்கவிடப்படுவதை நியாயப்படுத்த முடியாத ஆதங்கமே முந்தைய பதிவு. திரு.லதானந் அவர்கள் என்னுடைய நண்பராக இருந்திருக்கும் பட்சத்தில் அத்தகைய ஒரு பதிவிற்கு தேவையே இருந்திருக்காது....பரஸ்பரம் அறிமுகமில்லை.அவர் மீது எனக்கு வருத்தம்தானேயொழிய வேறொன்றுமில்லை.

அன்புடன்

-யட்சன்

இந்த கடிதத்திற்கு சம்பந்தமேயில்லாத குறிப்பு:

என்னில் அக்கறையுடன் ஆலோசனைகள் வழங்கிய கவி.முத்துலட்சுமி, இராம், சஞ்சய், லக்கிலுக், அய்யனார் போன்ற நண்பர்களுக்கு நன்றி. புபட்டியன் நிச்சயமாக நான் முற்பிறவியில் வவ்வால் இல்லை.

.

லதானந் செய்தது சரிதானே...!

Monday, August 11, 2008

லதானந் என்கிற பதிவர், பரிசல்காரன் என்கிற பதிவர் மீதிருக்கும் அதீத அக்கறையினால் அவரின் வலை மோகத்தினை கண்டித்து மனம் திறந்த மடல் ஒன்றினை பதிவாக இட்டிருக்கிறார். அந்த பதிவினை படித்த கணத்தில் பரிசல்காரனின் அறியாமை அகன்று அகக்கண் திறந்து உணர்வுவயப்பட்ட நிலையில் பதிவுலகை விட்டு போவதாக ஒரு ரெஸ்பான்ஸ் பதிவும் போட்டிருக்கிறார்.

தமிழ் டிவி சீரியல் வசனங்கள் பிச்சை வாங்குமளவிற்கு செண்ட்டிமெண்ட்டான வசனங்களுடன் பின்னூட்டங்கள்,பின்னூட்டங்களை படிக்கும் போது..லதானத் அவர்களின் மேன்மையான குணத்தினை நினைத்து நெக்குருகிப் போனேன். சக பதிவரின் மீதான அவரின் அக்கறை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.அவரின் பதிவினை படித்த பின்னர்தான் இங்கே வலைபதியும் முக்கால் வாசி பேருக்கு தாங்கள் வெட்டியாக பொழுதை கழித்துக் கொண்டிருப்பதே தெரிய வந்திருக்கிறது. இதற்காக நான் லதானந் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

சரி...இனி எனக்கு தோன்றிய சில அற்பமான எண்ணங்கள்......

லதானந் அவர்களின் பதிவின் மூலம் இருவரும் பதிவின் வழியாகவும், நேரிலும், தொலைபேசியிலும்,சாட்டிலும் பரஸ்பரம் ஸ்நேகமானவர்கள் என தெரிகிறது . இத்தனை புரிந்துணர்வுடன் செயல்படும் லதானந் அவர்கள், பரிசல்காரன் வழிமாறிப் போவதாய் உணர்ந்தவுடன், தொலைபேசியிலோ அல்லது சாட்டிலோ அல்லது நேரில் அழைத்தோ...தம்பி முதலில் குடும்பத்தை பார் அப்புறம் வலையுலகில் கும்மியடிக்கலாம் என சொல்லியிருக்கலாம்.

ஒரு வேளை அன்றைக்கு லதானந் அவர்கள் மௌனவிரதம் மேற்கொண்டிருந்திருக்கலாம், அல்லது பரிசல்காரன் பதிவெழுதுகிற அவசரத்தில் தனது அலைபேசியை சார்ஜ் செய்ய மறந்திருக்கலாம்.அதனால்தான் மின்னஞ்சல் வழியாக கூட அறிவுறுத்த மனமில்லாமல் அவசர அவசரமாய் பதிவெழுதியிருப்பார் என உறுதியாக நம்புகிறேன். இந்த தியாக திருப்பணியை கொச்சைப் படுத்தும் வகையில், திரு.லதானந் தனது பதிவு சூடான இடுகையில் வரவேண்டும்மென்றோ, அல்லது இப்படியாக ஒரு செண்ட்டிமெண்ட் ட்ரமா மூலம் வலைபதிவர்கள் மத்தியில் ஒரு பரபரப்பினை ஏற்படுத்த வேண்டுமென திட்டமிட்டு அதற்காக பரிசல்காரனை பலி கொடுத்தார் என்று நீங்கள் நினைப்பீர்களானால் உங்களை திருத்த நான் தனியே பதிவெழுத வேண்டியிருக்கும்.


எது எப்படியோ லதானந் அவர்களின் அறிவுரையினால் பதிவுலகில் அதிகமாய் பதிவெழுதுபவர்கள் தங்களை சந்தேகத்துடன் சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.முதல்கட்டமாய் பரிசல்காரன் என்கிற மொக்கைச்சாமி வெளியேறிவிட்டார்.மேலும் பல மொக்கைச்சாமிகள் தங்களுக்கு சூடும் சொரணையும் வ்ந்துவிட்டதாக வாக்குமூலம் வேறு கொடுத்திருக்கிறார்கள்.இத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதற்காக திரு.லதானந் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி....

குசேலனுக்கு பதிலா இதப்பார்க்கலாம்!

Sunday, August 3, 2008



ஆளாளுக்கு குசேலனையும், ரஜினையும் பிரிச்சி மேய்றதுக்கு பதிலா இந்த குத்தாட்டத்தை பார்த்து சந்தோஷப்படலாம். குசேலன் குப்பைன்னா...இது அதைவிட குப்பை. குசேலன் ஹிட்டுன்னா...இது மெஹா ஹிட்..

சமீபத்துல சோபனாவை பார்க்க நேர்ந்தது...அன்னில இருந்து ஷோபனா பத்தி ஒரு பதிவு போடனும்னு மண்டைக்குள்ளார ஓடீட்டு இருந்துச்சி...இன்னிக்கு இறக்கி வச்சாச்சி...நீங்களும் என்சாய் பண்ணுங்க !

மேற்படி பாட்டு போட்டதுக்கு பிராயசித்தமாய் ஒரு அருமையான ரீமிக்ஸ்....ஷோபனா, அமிதாப்...அநேகமாய் நிறைய பேர் இதை பார்த்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.



இதுதாண்டா ரீமிக்ஸ்...னு சொல்லவைக்கும் இசை,இசையமைப்பாளர்(?) பெயர் பாலி சாஹூ.

என்னுடைய கணிப்பில் பொன்னியின் செல்வனின் குந்தவைக்கு ஷோபனா பொருந்தியிருபார்....இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வீர்களோ தெரியவில்லை.

போலி டோண்டுவும் ஒரு புண்ணாக்கு பதிவும்

Thursday, July 24, 2008

போலி டோண்டு என அன்போடு(?) அழைக்கப்பட்ட திருவாளர். மூர்த்தி என்பவர் சென்னை சைபர்க்ரைம் போலீசாரின் வசமிருப்பதாகவும், அவருக்கெதிரான நடவடிக்கைகள் பற்றியும் பெரியவர் டோண்டு தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு பிடிக்காத அல்லது மாற்றுக்கருத்தாளர்களை எதிர்கொள்கிறேன் பேர்வழியென அவர் செய்த செயல்கள் யாவும் அருவெறுப்பானவை, தரம்தாழ்ந்தவை, தண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இப்போது அவர் முடக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியே...

இந்த பதிவின் நோக்கம் அவரின் வீழ்ச்சியை அறிவிக்கும் ஜெயபேரிகையோ அல்லது அதை தொடரும் கொண்டாட்டங்களோ இல்லை. வலைபதிவுகளில் நாலாண்டு காலத்திற்கு மேல் சுற்றி வருபவன் என்கிற முறையிலும், ஒரு சக பார்வையாளனாய் என்னுடைய சில எண்ணங்களை சொல்வதே இப்பதிவு....

திரு.மூர்த்தி என்பவர் தமிழ்வலையுலக செயல்பாட்டின் முன்னோடிகளில் ஒருவர் என்பது பலருக்கு தெரிந்திருக்காது, முத்தமிழ்மன்றம் போன்ற குழுமங்களில் அவரின் பங்களிப்புகள் இருந்தது, இருக்கிறது. இத்தகைய மனிதரை போலி டோண்டுவாக மாற்றிய பெருமை, நம்முடைய மூத்த பதிவர் பெரியவர் டோண்டுவையே சாரும் என்பது நிஜத்திலும் நிஜம். இதை அவரும் மறுக்க மாட்டார், மறுக்கவும் முடியாது.

நம்முடைய மூத்த பதிவருக்கும் மூர்த்தியின் புதிய அவதாரம் தனது வலையுலக வளர்ச்சிக்கும், பரபரப்பிற்கும் தேவைபட்டதால்....அவரே மூர்த்திக்கு போலி டோண்டு என்கிற நாமகரணமும் செய்வித்து மூர்த்தியை கொம்பு சீவினார் .

திருவாளர் மூர்த்தியால், மிக மோசமாயும், கேவலமாயும் தாக்கப்பட்டவர் பெரியவர் டோண்டுவாகத்தானிருக்க முடியும். பாவம் அப்போதெல்லாம் அவருக்கு காவல்துறை அலுவலகம் எந்த திசையில் இருக்கிறதென தெரியாது போயிருக்கிறது. மூர்த்தியை தானே கண்டுபிடிக்கப் போவதாயும், அதற்கென யுக்தி, உத்தி என தன் சார்ந்த ஒரு குழுவினை உருவாக்கவும், அவர்களுக்கு பிதாமகனாய் செயல்பட்டு தனக்கு புகழ்தேடிக்கொண்டார் என்பதை அப்போதைய தமிழ் வலைப்பதிவின் பங்களிப்பாளார்கள் அனைவரும் அறிவர்.

தனக்கும் தான் சார்ந்தோருக்கும் ஏற்பட்ட இந்த பாதிப்புகளையும், அசிங்கங்களையும் ஏதோ தர்மயுத்தம் மாதிரியும், இவர் அதை காக்கப் புறப்பட்ட புரட்சியாளர் மாதிரியான பில்ட்டப்புகளினால், ஆத்திரத்தில் அறிவிழந்த மூர்த்தியும் பெரியவரின் பதிவுகளில் பின்னூட்டமிடும் சக பதிவர்களையும் வாசகர்களையும் குறிவைத்து வெறிநாய் போல விரட்டத்துவங்கினார்...இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது அப்பாவியான சக பெண் பதிவர்கள்தான்..... அதிலும் பிராமணர்கள் என தெரிந்தால் மூர்த்தியின் ஆபாசமும், அர்ச்சனையும் எல்லை மீறியது.

தனிமனிதனாய் சுற்றிக்கொண்டிருந்த மூர்த்தியை....குழுவாய் செயல்பட வைத்ததில் இந்த பெரியவருக்கு நிறையவே பங்குண்டு....எப்பொழுதெல்லாம் தன்னுடைய பதிவுகள் சுணங்குகிறதோ அப்போதெல்லாம் புதிய அஸ்திரம் ஒன்றை வெளிக்காட்டி....தனக்கும் போலி டோண்டுவுக்கும் விளம்பரம் தேடிக்கொண்டதில் இவருக்கு இனை யாருமில்லை.

அனானிகளை கேவலமாய் விமர்சித்துவந்த இந்த பெரியவர், டஜன் கணக்கில் போலி பதிவுகளை வைத்திருந்தார் என்பதும், கையும் களவுமாய் மாட்டி சந்தி சிரித்தபின்னர் இல்லாத குட்டிக்கரணம் போட்டது சரித்திரம். இவருடைய அடிப்பொடியொருவர், சக பெண் பதிவர் ஒருவரை பற்றி எழுதிய ஆபாசப்பதிவிட்டு, கையும் களவுமாய் மாட்டிக்கொண்டு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த போது, தனது சிஷ்யருக்காய் இவர் அடித்த சப்பைக்கட்டுகளும், சல்ஜாப்புகளும் இப்போது நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நகைச்சுவை காட்சிகள்.

இன்றைக்கு கூட மூர்த்தி முடக்கப்பட்டது, செந்தழல்ரவி, ஓசைசெல்லா போன்ற இளைய்வர்களால்தான் என்பதை மறந்து விடக்கூடாது.பாராட்டும் வாழ்த்துகளும் இந்த இளையவர்களுக்கே போய்ச்சேர வேண்டும். நம் பெரியவருக்கு மூர்த்தியை முடக்கும் எண்ணம் எக்காலத்திலும் இருந்ததில்லை....போலி டோண்டு இல்லாவிட்டால் தான் காணாமல் போய்விடுவோம் என்பது மாதிரியான நினைப்பில், தொடர்ச்சியாய் அதைச்செய்கிறேன்...இதைச்செய்கிறேன் என சவடால் விட்டுக்கொண்டே, மலிவான விளம்பரங்களுக்காய் மூர்த்தியின் திருவிளையாடல்களை ஊக்குவித்தார் என்பதுதான் உண்மை.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல் அவசியம்தான்....ஆனால் குற்றவாளியை தொடர்ந்து குற்றம் செய்ய தூண்டியவரை என்ன செய்யலாம்.இப்போதைக்கு இவ்வளவுதான். இதற்கு மேல் எழுதினால் கோபத்தில் என்ன எழுதுவேன் என்று தெரியாது.(முந்தைய வரி எந்த பதிவிலிருந்தும் காப்பியடிக்கப்படவில்லை...நானே எழுதியதாக்கும் :-) )

மிக முக்கியமான அடிக்குறிப்பு :

1. பெரியவரின் திறமை மற்றும் தன்னம்பிக்கை மீது எனக்கு எப்போதும் அசாத்தியமான மரியாதை உண்டு.

2. திரு.மூர்த்தி, காலத்தின் கட்டாயத்தால் மட்டுமே தன்னுடைய பதிவுகளில் மன்னிப்பு கடிதமிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவர் திருந்திவிட்டதாக நான் நம்பவில்லை.

3.தனிமனித விமர்சனங்களுக்கும், தனிமனித தாக்குதல்களுக்குமான வித்தியாசங்களை பதிவர்கள் இந்த சூழலிலாவது உணர்தல் அவசியம்.

4. அனைவரும் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வது அவசியம்.

உண்மை தமிழன் மன்னிச்சிருங்க !

Monday, July 21, 2008

நேற்று உங்கள் படைப்பான ‘புனிதப்போர்' என்கிற குறும்படத்தினை காண முடிந்தது. எண்ணங்களை எழுத்தில் வடிப்பதும், அதை காட்சிப்படுத்துவதும் வெவ்வேறான தளங்கள் என்கிற அடிப்படையை உணராமல் போனதுதான் உங்களின் இந்த முயற்சியின் முதல் தோல்வியாக இருக்கும்.

அரதப்பழசான ஒரு கரு, அதை விட அமெச்சூரான ஒரு தலைப்பு...பக்கம் பக்கமாய் போதனைகள்,எரிச்சலூட்டும் கை தட்டல்கள், தேமேவென இந்த பக்கமும் அந்த பக்கமும் நகரும் கேமரா....இதையெல்லாம் விட கொடுமையான எடிட்டிங்...

என்ன கொடுமையிது சரவணா!

ஒரு தேர்ந்த விளம்பரபட இயக்குனன்...நாலைந்து ஃப்ரேமில்...இரண்டு நிமிடத்துக்குள் இன்னமும் அழுத்தமாய் பதிவு செய்துவிடக்கூடிய ஒரு சங்கதியை, நீங்கள் பன்னிரெண்டு நிமிடங்களுக்கு நீட்டி பார்வையாளனின் எரிச்சலை கட்டிக்கொண்டதுதான் மிச்சம்.

முயற்சிகள் தவறலாம்...ஆனால் முயற்சிக்க தவறக்கூடாது, உங்களின் அடுத்த முயற்சிக்கு வாழ்த்துகள்.

கணக்கு பண்ண வர்றீங்களா?

Sunday, July 20, 2008

என்ன பண்றது இபப்டி தலைப்பு போட்டாத்தான் நம்ம ஏரியா பக்கம் ஆளுக எட்டிப் பாக்குறாங்க...ஹி..ஹி...ம்ம்

இனி மேட்டருக்கு வருவோம்...வருமான வரி கணக்குகளை இந்த மாதம் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்தாக வேண்டும். ஆளாளுக்கு ஆடிட்டர் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் நேரம். சம்பளகாரர்களுக்கு கவலையில்லை...அவரவர் நிறுவனத்திலேயே பிடித்தம் செய்து விடுகின்றனர்.

எதுக்கு இத்தனை பில்டப்....

வேற ஒன்னுமில்லை மக்களே...இன்னிக்கு வலை மேஞ்சிட்டு இருந்தப்ப...இந்த இனைய தளம் கண்ணில் சிக்கிச்சு...சரி பதிவுக்கு ஒரு மேட்டர் தேறிச்சேன்னு பதிஞ்சிட்டேன்.

தேவையானவங்க பயன்படுத்திக்குங்க....

NITHYA'S TAX CALCULATOR

தமிழச்சியின் பதிவில் பின்னூட்டம் போடமுடியாத கொடுமை!

Thursday, July 17, 2008

தமிழச்சியின் பதிவுகளில், தமிழச்சியின் கிறுக்கல்(!) என்கிற பதிவும் ஒன்று. கொஞ்ச நாளா அங்கிட்டு இங்கிட்டு சுத்திட்டு இருந்ததால அவரோட அந்த பதிவு பக்கம் போகலை. இன்னிக்கு திடீர்னு தோணிச்சு, சரி போய்ட்டு வருவமேன்னு போனேன். ஒரு கவிதை(?), சாரி...கிறுக்கல், அதை படியுங்கோ முதலில்....

பிடித்ததும்,பிடிக்காததும்...

உனக்கு பிடிக்காதது...
எனக்கு பிடித்திருந்தது...!
எனக்கு பிடித்தது...
உனக்கு பிடிக்காதிருந்தது...!
ஆனாலும் உனக்கு...
என்னை பிடித்திருந்தது...!
எனக்கு உன்னை பிடித்திருந்தது...
இன்றோ உனக்கும் எனக்கும்...
நம்மை பிடித்திருக்கிறதா...?


மொதத்தடவை படிக்கறப்ப ஒன்னும் வெள்ங்காது...இரண்டு மூனு தடவை படிச்சவுடனே இம்புட்டுதானான்னு தோணும்....எனக்கும் தோணிச்சி...சரி நாமளும் நம்ம பங்குக்கு நாலு வரி கிறுக்கீட்டு போவமேன்னு பின்னூட்டமா இப்படி கிறுக்கினேன்.

உனக்கு
பிடித்ததெல்லாம்
எனக்கு
பிடித்திருக்கவேண்டியதில்லை
ஆனாலும்
எனக்கு பிடிக்காததையும் ரசிக்கிறேன்...
உன்னை எனக்கு பிடித்திருப்பதால்....

(என்ன கொடுமையிது! ஏன் நான் இப்படியல்லாம் எழுதறேன்...ஹி..ஹி..ம்ம்ம்)


இப்படி டைப்பீட்டு பதிவு செய்யப்போனா...உன்னோட பின்னூட்டமெல்லாம் இங்க எடுபடாது மவனேன்னு ப்ளாக்கர் சொல்லீருச்சு, ஆஹா!, நாமளே ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கொரு தடவைன்னு இங்கன வர்றோம், நம்ம பின்னூட்டத்துக்க் அனுமதியில்லையான்னு ஆத்திரப்பட்டு திரும்ப பார்த்தா...அவங்க பங்காளிக மட்டுந்தான் அங்கன பின்னூட்டம் போடனுமாம். நானும் ஒரு பழய பங்காளிதான்னு அவுகளுக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல...அதான் பதிவா போட்டுட்டேன்.யாராச்சும் எங்கனயாச்சும் தமிழச்சிய பார்த்தா இந்த பதிவு மேட்டர அவுக காதுல போடுங்கப்பேய்....

நாங்களும் ரவுடிதான்....!

Wednesday, July 16, 2008

தயாநிதி யாருக்கு ஓட்டுப் போடுவார்?

Tuesday, July 15, 2008

இருபத்தியிரண்டாம் தேதி !

நாடாளுமன்றத்தில் தனது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருக்கிறார் பிரதமர், தற்போதைய நிலவரத்தின் படி எப்படி கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் பத்திலிருந்து, பதினைந்து வாக்குகள் தேவைப்படுகிற பரிதாப நிலையில்தான் தற்போதய மத்திய அரசு இருக்கிறது.

தற்போதைய நிலையில் அரசுக்கு உறுதியான் ஆதரவினை தெரிவித்துள்ளவர்கள் பட்டியலின் படி 257 பேர் இருக்கின்றனர், இதன் படி இன்னமும் பதினைந்து பேரின் ஆதரவினை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது.

Congress 153
Samajwadi Party 39
Rashtriya Janata Dal 24
Dravida Munnetra Kazhagam 16
Nationalist Congress Party 11
Pattali Makkal Katchi 6
Lok Janshakti Party 4
Marumalarchi Dravida
Munnetra Kazhagam
2
Indian Union Muslim League 1
Republican Party of India 1

TOTAL 257 MP


இதேவகையில், அரசுக்கு எதிராக....

Bharatiya Janata Party 130
Communist Party of India-Marxist 43
Bahujan Samaj Party 17
Shiv Sena 12
Biju Janata Dal 11
Communist Party of India 10
Janata Dal - United 8
Shiromani Akali Dal 8
Telugu Desam Party 5
All India Forward Bloc 3
Rashtriya Lok Dal 3
Telangana Rashtra Samithi 3
Revolutionary Socialist Party 3
Marumalarchi Dravida Munnetra Kazhagam 2
Assom Gana Parishad 2
National Conference 2
Kerala Congress 1
Nagaland People's Front 1
Janata Dal-Secular 1
Trinamool Congress 1

TOTAL 266 MPs


ஆக இவர்களுக்கு இன்னமும் ஆறு உறுப்பினர்களின் ஆதரவிருந்தால் எதிர்கட்சிகள் அரசினை கவிழ்த்துவிட முடியும். தற்போதைய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கும் பட்சத்தில் ஆதாயம் பெறப்போகும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். அதனால் அவர்கள் வாயில் விரலை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இரண்டு புறமும் குதிரை பேரம் நடக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. காங்கிரஸ் தரப்பில் ஒரு உறுப்பினருக்கு இருபத்தியைந்து கோடி வரை கொடுக்க தயாராய் இருப்பதாய் கம்யூனிஸ்ட்டுகள் குற்றம் சாட்டியியிருப்பதை கவனிக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி இதைவிட அதிகம் கொடுத்து தங்களுக்கு தேவையான ஆறு உறுப்பினர்களை விலைபேசும் வாய்புகளை மறுப்பதற்கில்லை.

தற்போதைய நிலையில் ஆறு உதிரிகளுக்குத்தான் கொண்டாட்டம், மத்திய அரசினால் அவமானப்படுத்தப்பட்டதாய் கருதும் சிபுச்சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஐந்து உறுப்பினர்களின் நிலைப்பாடுமே நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவினை தீர்மானிக்கும் வாய்ப்பிருக்கிறது.

துவக்கத்தில் இருந்தே சிவசேனா மற்றும் திரினமுல் காங்கிரஸ் கட்சிகள், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தினை எதிர்க்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். எதிர்வரும் ஓட்டெடுப்பில் இவர்கள் கலந்து கொள்ளாமல் நடுநிலைவகிக்கும் வாய்புகளையும் மறுப்பத்ற்கில்லை.அவ்வாறான சூழல் ஆளும் கட்சியின் வெற்றிவாய்புகள் எளிதாகும்.

இப்போது பதிவின் தலைப்புக்கு வருவோம்....

திமுக தலைமையினால் தொடர்ச்சியாய் அவமானப்படுத்தப் பட்டுவரும், மாறன் சகோதரர்கள் இந்த வாக்கெடுப்பினை முன்வைத்து கட்சித்தலைமையுடன் சமரசம் பேச முனைவார்கள். ஒருவேளை தங்கள் முயற்சிகள் தோற்கும் பட்சத்தில் தயாநிதி மாறன் வாக்கெடுப்பினை புறக்கணிப்பார் என்றே எதிர்பார்க்கிறேன்.அத்தகைய ஒரு நடவடிக்கை தயாநிதி மாறனை எதிர்முகாமுக்கு கொண்டு்செல்லும் முதல் தப்படி(Setp)யாக அமையும்.பணபலமிக்க மாறன் சகோதரர்களை அரவனைக்க விஜயகாந்த் முதல் அம்மா வரை தயாராகவே இருப்பார்கள்.

கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயலாய் கருதி, தயாநிதி மாறன் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டால், அது தனக்கு சாதகமான நிலைப்பாடாய் அமையும் என தயாநிதி கணக்குப் போடுவார்.எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக அல்லது அதிமுக நிறைய இடங்களை பிடிக்கும் பட்சத்தில், அடுத்து அமையவிருக்கும் மத்திய அரசிடம் பேரம் பேசும் தரகர் வேலைக்காவது இவரை தங்கள் அருகாமையில் வைத்துக் கொள்ள இந்த கட்சிகள் நினைக்கலாம்.

திமுக தலைமை மாறனுக்கு கருனை காட்டுமா அல்லது எதிர்முகாமுக்கு அவரை விரட்டியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(முதல் அரசியல் கட்டுரை...அத்தனை கோர்வையாக வரவில்லை என நினைக்கிறேன்...நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...பின்னூட்டமிடுங்கள்.ஆதரவினை பொறுத்து வ்ரும் நாளில் அரசியலை பிரித்து மேய்வோம்)

கண்கள் இரண்டால்...

Monday, July 14, 2008



சுப்ரமணியபுரம்...சமீபத்தைய தமிழ் சினிமாவை புரட்டிப்போட்டிருக்கும் படம். இன்னொரு மதுரைக்காரன் ஜெயித்ததற்கான தற்பெருமை, தொடர்ச்சியாய் மதுரையின் கதைகள் தமிழர்களின் உணர்வுகளின் நீள அகலங்களில் ஊடுறுவுவதை காண்பதில் ஒரு பெருமிதம்..இதையெல்லாம் சொல்வதற்காய் இந்த பதிவு இல்லை.

கண்கள் இரண்டால்...இந்த பாடலும், அதில் அடுக்கப்படும் சம்பவங்களும், அச்சுஅசலாய் பிரதியெடுக்கப்பட்ட என்பதுகளின் சூழலும்...இது எனக்குள் கிளறிய நினைவுகளை சேகரித்து வைக்கவே இந்த பதிவு....

இளையராஜாவை நினைவுபடுத்தும் இசைக்கோர்வை, அன்றைய அலைகள் ஓய்வதில்லை பாடல்களையொத்த வரிகள்...

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா...


அது எனக்கு பள்ளிக்கூட வயது, பெல்பாட்டம் பேண்ட் போடவேண்டுமென வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததெல்லாம் நினைவுக்கு வ்ருகிறது.ஒரு தீபாவளிக்கு கீழே ஜிப் வைத்த பெல்பாட்டம் கிடைத்தபோது அடைந்த களங்கமில்லாத சந்தோஷத்தை சமீபத்தில் எப்பொழுதும் நான் பெறவில்லை என்றே நினைக்கிறேன்....

இந்த பட ஹீரோவைப்போல, பரட்டைத்தலையும், பத்துநாள் தாடியுமாய் நான் பார்த்த பல அண்ணன்மார்கள் இப்போது அய்ம்பதுகளில்....தேய்ந்து போன கார் டயர்களையே நினைவுபடுத்துகின்றனர்.

குறுகுறுவென திருட்டுப்பார்வையும், மெலிதான கோபத்துடன், ”நாங்களும் இருக்கோமாக்கும்” என்பதான முறைப்பும்...பொழச்சிப்போடாங்கிற மாதிரியான மெலிதான முறுவலும்....இன்ன பிற கவிதையான விழிமொழிகளுடன் வீதிக்கொரு கதாநாயகி இருந்தாள்...இன்னமும் இருக்கத்தான் செய்கிறாள்.வாழ்க்கையின் வேகத்தில் நான்தான் அதையெல்லாம் மறந்துவிட்டேனோ என்பது மாதிரியான உணர்வுகளை தந்த பாடல் இது.

இந்த கதாநாயகன்...எப்படி அச்சுஅசலாய் நம்மை மாதிரியே பல்லைகாட்டுகிறான் என்பதும், இன்னொரு ஆச்சர்யம். அந்த சமயத்தில் எனக்கு தெரிந்த பயல்கள் பலரும், ஏன் என்னையும் சேர்த்துதான்...விழிகளின் அங்கீகாரம் கிடைத்த கணத்தில் பற்பசை விளம்பரக்காரனைப் போல இளித்திருக்கிறோம்...அதை அந்த கதாநாயகிகளும் ரசிக்கத்தான் செய்தார்கள்.

மதுரையின் மருத்துவக்கல்லூரி வளாகம், அவுட்போஸ்ட் பஸ்ஸாடாப், மிஷன் ஹாஸ்பிடல் பஸ்ஸ்டாப் எல்லாம் இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது...மூன்று ஹீரோயின்களை சமாளித்ததை இப்போது நினைத்தால் ஆச்சர்யமான ஆச்சர்யம்.

இன்றைக்கு எல்லாம் தொலைத்து,மறந்து ஏதோ சமீபத்தில் காலிசெய்யப்பட்ட வீட்டிற்குள் நிலவும் வெறுமையான உணர்வுடன் இந்த பதிவினை முடிக்கிறேன்

சக்கரகட்டி !

Saturday, July 12, 2008

வேற யாரு நாந்தான் சக்கரகட்டி...

ஆமா!, இன்னிக்கு காலையிலதான் டிக்ளெர் பண்ணினாங்க, புலிவருது புலிவருது கதையா..வரும், வந்துரும், வந்துட்டே இருக்கும்னு சொன்னதெல்லாம் பலிச்சி நான் இன்னிக்கு சக்கரகட்டியாய்ட்டேன்.

இன்னும் புரியலயா...எனக்கு சுகர் வந்துருச்சுப்பேய்!

கடந்த வாரத்தில் வழக்கமான இடைவெளிகளில் செய்யும் ரத்த பரிசோதனையின் போது வெறும் வயிற்றில் இரத்தத்தில் சக்கரையின் அளவு 120க்குள் இருக்க வேண்டுமாம். நமக்கு 144, அட்ரா சக்க..அட்ராசக்கன்னு...இன்னிக்கு காலையில மொத நாள் ஸ்கூலுக்கு போற எல்கேஜி பயலை இழுத்துட்டு போற மாதிரி அன்ணாநகர் ல இருக்கற Dr.Mohans Diabetes Specialities centre க்கு வூட்டுக்காரம்மா தள்ளீட்டு போனாங்க .

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ள இருந்து இந்த மையத்துக்கு போய்ட்டு வந்துட்டு இருக்கேன்...பேஷண்ட்டா இல்லை அட்டெண்டரா......ஏன்னா...என்னோட அப்பா, அம்மா ரெண்டுபேருமே வெல்லக்கட்டிகள்..ஹி..ஹி.இன்னிக்கு நம்மளை பேஷண்ட்டா ஆக்கீட்டாய்ங்க.

காலையில ஏழுமணிக்கு உள்ள நுழைஞ்ச நான் வெளியவரும் போது மாலை 5.15. ஆஹா, அப்படி என்ன டெஸ்ட் பண்ணாய்ங்கன்னு ரோசனை வருமே...ஒரு எழவும் இல்லை. காலையில 10.20 கெல்லாம் எல்லா டெஸ்ட்டும் முடிச்சிட்டேன். ரிப்போர்ட் ரெடியாகவும், டாக்டரை பார்க்கவும்தான் அம்புட்டு நேரம் வெய்ட் பண்ணினேன். கடுப்பான கடுப்பு...எவனை பார்த்தாலும் எகிற வேண்டும் போல இருந்தது.அத்தனை சிறப்பான சேவை. அரசு மருத்துவமனை கெட்டது...அத்தனை சாவகாசமாய் மருத்துவமனை ஊழியர்கள்.ஆனால் விவரமாய் 3600 ரூபாயை ஆரம்பத்திலேயே பிடுங்கிவிட்டார்கள்.

இநத் லட்சணத்தில் டயட்டீஷியன் வேற சமீபத்துல உங்க மன நிலையில ஏதாவது மாற்றம் இருக்கறதா நினைக்கறீங்களான்னு கேட்டு வெறுப்பேத்தினா....என்னதான் செய்வேன்.ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா...னு வடிவேலு மாதிரி கண்ணை கட்டிக்கிட்டு வந்திருச்சு.வெறுப்புல எதையாவது சொல்லப்போய் அதுக்கு நாலு டெஸ்ட் எடுடான்ன்னு இம்சையாக்கிருவாய்ங்களோன்னு பல்லை கடிச்சிட்டு உக்காந்திருந்தேன்.

செம கூட்டம்...ஒரே ஒரு டாக்டர்தான் அம்புட்டு பேஷண்ட்டையும் பார்த்து ஆப்பு வைக்கனும்...பாவம் அவரும் எத்தனை பேரை சமாளிப்பார். என்னைத்தவிர அம்புட்டு பேரும் வயசானவய்ங்க...ஆஹா இந்த க்ளப்ல கொண்டு வந்து நம்மள சேத்துட்டாய்ங்களேன்னு வேற கவலையா வந்திருச்சு.

ஒரு வழியா டாக்டரை பார்த்தப்ப....இப்பத்தான் பார்டர க்ராஸ் பண்ணீருக்கீங்க, கவலைப்பட ஏதுமில்லை,ஆனா உங்களுக்கு சக்கரை வந்திருச்சி. இனி டயட்டெல்லாம் கரெக்ட்டா இருக்கனும். இரண்டுவாரம் மாத்திரை சாப்டுட்டு வாங்க...அப்பாலிக்கா மாத்திரைய நிறுத்தீட்டு டயட்ல மெய்ண்டெய்ன் பண்ணீரலாம்னு சொல்லி நெஞ்சுல பால்வார்த்தார் மவராசன்.

ச்சே...இம்புட்டு நாளும் மனசளவுள இனிமையா இருந்த நாம...இப்ப உடம்பாலும் இனியவனாய்ட்டோமேன்னு ஒரே ஃபீலிங்காய்டுச்சி...ஹி..ஹி...(வெளம்பரம்..வெளம்பரம்!)

சரி இந்த நல்ல செய்திய நாலு பேர்ட்ட சொல்லுவோமேன்னு கூப்டா...அவனவன் டன் கணக்குல அட்வைஸ் பண்றானுங்க...ஏண்டா சொன்னோம்னு ஆய்ருச்சி...இதுவும் வேணுமடா...எனக்கு இன்னமும் வேணுமடான்னு பாடிட்டே இதை தட்டிட்டு இருக்கேன்...

இப்ப கொஞ்சம் சீரியஸ் மேட்டர்...

சர்க்கரை வியாதி என்பது குறைபாடேயொழிய நோயாக கருதமுடியாது.

சரியான உணவுப்பழக்கமும், தொடர்ச்சியான உடற்பயிற்சியும் இருந்தால் தாராளமாய் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இந்தியர்கள்தான் உலக அளவில் இந்த குறைபாட்டுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

சர்க்கரை வியாதியென்பது வம்சாவழியாய் தொடர அதிகளவில் வாய்ப்புகள் இருக்கின்றன.

சரியான மருத்துவ ஆலோசனை பெறாமலோ அல்லது முறையான விழிப்புணர்வு இல்லாது போனால் இந்த குறைபாடு மற்ற உறுப்புகளின் செயல்பாட்டினை பாதித்து அதனை செயலிழக்கச் செய்யும் அபாயம் இருக்கிறது.

எனவே 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இரத்தப் பரிசோதனை செய்து சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவினை கண்காணிப்பில் வைத்திருப்பது நல்லது.

ஊதற சங்கை ஊதீட்டேன்....உடம்ப பார்த்துக்கங்கப்பா....

TINTIN காமிக்ஸ் வேணுமா ?

Friday, July 11, 2008

காமிக்ஸ் பிரியர்களின் வெறித்தனமான ஆதரவை பெற்ற பாத்திரங்களில் ஒன்றான TINTIN கதைகள் இனையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

DOWNLOAD FORM HERE:-


Tintin in the Land of the Soviets - (1929-1930)

Tintin in the Congo - (1930-1931)

Tintin in America - (1931-1932)

Cigars of the Pharaoh - (1932-1934)

The Blue Lotus - (1934-1935)

The Broken Ear - (1935-1937)

The Black Island - (1937-1938)

King Ottokar's Sceptre - (1938-1939)

The Crab with the Golden Claws - (1940-1941)

The Shooting Star - (1941-1942)

The Secret of the Unicorn - (1942-1943)

Red Rackham's Treasure- (1943-1944)

The Seven Crystal Balls - (1943-1948)

Prisoners of the Sun - (1946-1949)

Land of Black Gold - (1948-1950)

Destination Moon- (1950-1953)

Explorers on the Moon - (1950-1954)

The Calculus Affair - (1954-1956)

The Red Sea Sharks - (1958)

Tintin in Tibet - (1960)

The Castafiore Emerald - (1963)

Flight 714 - (1968)

Tintin and the Picaros - (1976)

Tintin and Alph-Art - (published posthumously in 1986)

Tintin and the Lake of Sharks- (published in 2005)

காடுவெட்டி...

கலைஞரை பகைத்துக் கொண்டால் இப்படியெல்லாம் நடக்குமென தமிழ்குடிதாங்கி எதிர்பார்த்திருப்பார்தான். ஆனால் தன்னுடைய ஆளை இப்படி எந்த சேதாரமுமில்லாமல் கோழிக்குஞ்சை அமுக்குவது போல் அமுக்கிக் கொண்டு போய் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பூட்டுவார் என எதிர்பார்த்திருக்க மாட்டார்தான்.

வட தமிழகமே குலுங்கும், பொங்கிப் பிரயளமாகும், ரத்த ஆறு ஓடும்...ம்ரங்களெல்லாம் மல்லாந்து கிடக்கும் என்ற் மார்தட்டியவர்கள் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என தெரியவில்லை. ஏதோ பேருக்கு நாலு இடத்தில் மறியல், ஒரு பஸ் எரித்தல் என்கிற வகையில் சம்பிரதாயமாய் கைகழுவி விட்டதைப் போலத்தான் தோன்றுகிறது.

காடுவெட்டியின் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பலவும் அம்மாவுக்கு எதிராக பேசியதாய் போட்டிருப்பதால், அம்மாவின் அனுசரனையையும் தற்போதைக்கு எதிர்பார்க்க முடியாது.

வன்னியர் வாரியம், பங்காரு அடிகளார் கலைஞரை சந்தித்தது...திருமாவை அரவனைப்பது என மிக நேர்த்தியாய் காய்கள் நகர்த்தப்படுகிறது. தனது சொந்த பலம் சிதைவதை தடுக்கமுடியாமல் பாமக தலைமை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் அவர் கட்சிக்காரர்களுக்கு வருவதற்கு முன்னர் ஏதாவது தடாலடியாய் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் அய்யா தமிழ்குடிதாங்கி இருக்கிறார்.

என்னுடைய ஆலோசனையை தமிழ்குடிதாங்கி கேட்பாரேயானால்...மத்திய அரசு நம்பிக்கை வாக்கு கோரும் இந்த சமயத்தில் சோனியா மூலமாய் பேரம்பேசி கலைஞரோடு சமாதானமாய் போய்விடுவதே தற்போதைக்கு சாதகமான உத்தியாய் இருக்கும்.

செய்வாரா பெரிய அய்யா?

தமிழ்மணம் செய்யுமா?

தற்போது தமிழமணத்தில் ஜட்டிக்கதைகள், குட்டிக்கதைகள் தொடர்பாய் நிர்வாகமெடுத்த சில முடிவுகள் விவாதத்தில் இருக்கிறது. அது குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை.

ஆனால்...

தமிழ்மணம் சூடான இடுகைகளை தூக்கிவிட்டு அந்த இடத்தில் துறைசார்ந்த பதிவுகளை வைக்கலாம்.

செய்வார்களா?

யட்சன்னா...?

Saturday, July 5, 2008

யட்சன் என்பது தமிழ் வார்த்தையே அல்ல...

தமிழில் யட்சனை...இயக்குபவன், அல்லது இயங்குபவன் என சொல்லிக் கொள்ளலாம்.இந்திய மதங்கள் எல்லாவற்றிலுமே இந்த யட்சர்கள் காணப்படுகின்றனர். யட்சர்கள் என்பவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொண்ட செயலை செயல்படுத்தும் அதிகாரம் கொண்டவர்களாகவே வர்ணிக்கப்படுகின்றனர்.

எதுக்கு இத்தனை விளக்கம் தர்றேன்...விடுங்கப்பா!, இந்த பேர் வித்யாசமா இருந்துச்சு, பதிவுக்கு வச்சுட்டேன். இனி யட்சன் என்ன சொல்ல வர்றான்னு மட்டும் பாருங்க...சரியா!