மெய்யாலுமே நான் முட்டாளுதான்...

Tuesday, March 31, 2009

இன்னிக்கு ஒரு நாளைக்கு மூளைக்கு ரெஸ்ட் குடுக்கறதுன்னு முடிவு பண்ணினதால போன வருசம் எழுதுன பதிவையே மறுபதிப்பா கொடுக்கிறேன்...ஆனாலும் உங்களுக்கு இந்த பதிவின் கடைசியில் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது....


ஏப்ரல் ஒன்ணும் நாணும்...

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு ஏப்ரல் ஒண்ணுன்னா சந்தோஷம்தான், ஏன்னா என்னை மாதிரியான மக்களுக்காக பரிசளிக்கப்பட்ட நாளாச்சே!.....நான் ஒரு முட்டாள் என ஒத்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் தயக்கமே இருந்ததில்லை. ஒரு வகையில் அப்படி சொல்லிக் கொள்வதில் பெருமை கிடைப்பதாக உணர்ந்திருக்கிறேன்.

எதுக்கு மறைக்கனும், உண்மையில் எல்லோரும் தங்களின் நிஜங்களை ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டார்களென்றால் அப்புறம் புத்திசாலிகளின் என்ணிக்கையும் தற்போது உயிருடன் இருக்கும் டைனோசர்களின் எண்ணிக்கையும் ஒன்றாய்தானிருக்கும். யார் வேண்டுமானாலும் புத்திசாலி மாதிரி நடிக்கலாம், நடிக்க முடியும் ஆனால் முட்டாளாய் நடிப்பதும் கஷ்டம், நடிக்கவும் யாரும் விரும்புவதில்லை.

முட்டாளாய் இருப்பதில் நிறையவே சவுகரியம் இருக்கிறது, முதலில் உங்களுடைய அங்கீகாரத்திற்கு யாரும் போட்டியாக வரமாட்டார்கள், உங்களை பார்த்து பொறாமை படுபவர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கும்.கருத்து திணிப்புகளும், சுற்றுப்புற அழுத்தங்களும் உங்களை ஏதும் செய்யாது......நீங்கள் விரும்புகிற தளங்களில் எவ்வித கூச்சமும் இல்லாமல் எளிதாய் புழங்கலாம். உங்களின் உலகத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்க்ள்....அது எத்தனை சுகம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.

சக முட்டாள்களுக்கு எனது இனிய முட்டாள் தின வாழ்த்துகள்.....

அப்படியே என்னோட பேஃவரைட் பாட்ட கேட்ருங்க........

இப்போ முதல்ல சொன்ன ஆச்சர்யம்....

1. மூளையே இல்லாத ஒருத்தன் மூளைக்கு ரெஸ்ட் கொடுக்க முடியுமா?

2.ஆச்சர்யம்னு சொன்ன உடனே கடைசிக்கு ஓடி வந்த உங்களை எதுல சேர்க்கிறது....ஹி..ஹி..வாங்க வந்து நம்ம ஜோதியில கலந்துக்கங்க

கருணா மினிஸ்ட்டராய்டாராம்ல....

Tuesday, March 10, 2009



ஹேய் மக்கா! இப்ப இவரு தேசிய ஒருமைபாட்டு மினிஸ்டராம்ல...

இதுவரை ஒரு பயபுள்ளையும் இதபத்தி பதிவு போடலை போலருக்கு..

வேலைக்கேத்த கூலி கொடுக்கறதுல ராசபக்சே நியாயமான ஆளுன்னு ப்ரூவ் பண்ணீட்டாரு..

வாங்கய்யா வாழ்த்துச்சொல்லுவம்...

பின்குறிப்பு :

யாராவது அவர் மூஞ்சில ஒரு திருட்டுக்களை தெரியுதுன்னோ, அவர் ஒரு விபீசனன்னோ அல்லது வேற மாதிரியோ திட்டி பின்னூட்டம் போட்டா அதையேல்லாம் அப்படியே அலவ் பண்ணீருவேன். பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல...ஆமா சொல்லீட்டேன் :)

ங்கொய்யால...திரும்ப வந்துட்டம்ல...

Monday, March 9, 2009


எம்புட்டு நாளுதான் தேமேன்னு வேடிக்கை பார்க்கறது...நெறய எழுதனும்னு நினைசாலும் அதெல்லாம் அப்பப்ப நெனப்போட போயிருச்சு...என்னத்த எளுதி, என்னத்த படிச்சி...என்னத்த பின்னூட்டம் போட்டுன்னு...இருந்தது போரடிச்சதனால இனிமேல தெனமும் எளுதிக்கிளிச்சி தமிழ் வலையுலகத்தை காப்பாத்தனும் முடிவுபணி களத்துல குதிச்சிட்டேன்.



நேத்திக்கு அரைப்பாவாடைன்னு ஒரு பதிவு...பார்த்தவுடனே வயசுக்கேத்த பதிவா இருக்கேன்னு ஜெர்க் ஆகி..எகிறிகுதிச்சு உள்ள போனா அந்தம்மா அவங்கள அரைபாவாடை போடவிடாத கொடுமையை புலம்பிருந்தாங்க...வருத்தமா போச்சு, அப்பாலிக்கா ...ஆஹா இதப் படிக்கவா எகிறிகுதிச்சோம்னு... செம கடுப்பாய்டுச்சி

அரைபாவாடைன்னு தலைப்பு போட்டா உள்ளார அப்டிக்கா இப்படிக்கா நாலஞ்சு படம் போடோனும்...அப்பத்தான் நம்ம ஏரியாவுக்கு வந்து போறவுகளுக்கு சந்தோசமா இருக்கும்....இதெல்லாம் அவுகளுக்கு புரியாது அதுனால நமக்கு நாமே திட்டத்தின் கீழ இங்கன ரெண்டு புள்ளைங்க படம் போட்ருக்கேன்...ஹி..ஹி...

சமீபத்துல வலை பதிவுகள் எல்லாம் ஒரே மாதிரியான பேட்டர்ன்ல இருந்தது மாதிரியான எரிச்சலான விசயம் வேறெதும் இருந்திருக்க முடியாது...

அநேகமா எல்லா பதிவரும் தமிழின உணர்வு தறிகெட்டு ஓட, எங்கூட்டுக்காரரும் அரண்மனையில வேலபார்ககிறாருங்கற மாதிரி பிழிய பிழிய ஈழப்பிரச்சினைய பிரிச்சி மேஞ்சதுதான் பெரிய கேலிக்கூத்து....இதுல நெறய பேர் மல்லாக்க படுத்துட்டு எச்சி துப்புனதுதான் ஹைலைட்....ஹி..ஹி..

இது வரை இந்த பிரச்சினையை எழுதாத தமிழின துரோகிகளுக்காக சில தலைப்பு வச்சிருக்கேன்...யாராச்சும் தேவைபட்டா யூஸ் பண்ணிக்கங்க...

”பிரபாகரன் மீசை மயிர்தான் அண்ணன் சீமான்”

”சோனியா மேனியாவும் சொரனையற்ற தமிழனும். ”

”கருனாநிதிக்கு முதுகெலும்பு...மருத்துவ ஆச்சர்யம் - வாய் பிளந்த டாக்டர்கள் ”

”சோ ஒரு சொக்கத்தங்கம்”
(அநேகமா இதை டோண்டு ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருப்பார். அவர் கைல பெர்மிசன் வாங்கீடுங்க)...

இன்னும் நெறய எளுதனும்யா....அப்புறமா வர்றேன்.