மெய்யாலுமே நான் முட்டாளுதான்...

Tuesday, March 31, 2009

இன்னிக்கு ஒரு நாளைக்கு மூளைக்கு ரெஸ்ட் குடுக்கறதுன்னு முடிவு பண்ணினதால போன வருசம் எழுதுன பதிவையே மறுபதிப்பா கொடுக்கிறேன்...ஆனாலும் உங்களுக்கு இந்த பதிவின் கடைசியில் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது....


ஏப்ரல் ஒன்ணும் நாணும்...

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு ஏப்ரல் ஒண்ணுன்னா சந்தோஷம்தான், ஏன்னா என்னை மாதிரியான மக்களுக்காக பரிசளிக்கப்பட்ட நாளாச்சே!.....நான் ஒரு முட்டாள் என ஒத்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் தயக்கமே இருந்ததில்லை. ஒரு வகையில் அப்படி சொல்லிக் கொள்வதில் பெருமை கிடைப்பதாக உணர்ந்திருக்கிறேன்.

எதுக்கு மறைக்கனும், உண்மையில் எல்லோரும் தங்களின் நிஜங்களை ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டார்களென்றால் அப்புறம் புத்திசாலிகளின் என்ணிக்கையும் தற்போது உயிருடன் இருக்கும் டைனோசர்களின் எண்ணிக்கையும் ஒன்றாய்தானிருக்கும். யார் வேண்டுமானாலும் புத்திசாலி மாதிரி நடிக்கலாம், நடிக்க முடியும் ஆனால் முட்டாளாய் நடிப்பதும் கஷ்டம், நடிக்கவும் யாரும் விரும்புவதில்லை.

முட்டாளாய் இருப்பதில் நிறையவே சவுகரியம் இருக்கிறது, முதலில் உங்களுடைய அங்கீகாரத்திற்கு யாரும் போட்டியாக வரமாட்டார்கள், உங்களை பார்த்து பொறாமை படுபவர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கும்.கருத்து திணிப்புகளும், சுற்றுப்புற அழுத்தங்களும் உங்களை ஏதும் செய்யாது......நீங்கள் விரும்புகிற தளங்களில் எவ்வித கூச்சமும் இல்லாமல் எளிதாய் புழங்கலாம். உங்களின் உலகத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்க்ள்....அது எத்தனை சுகம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.

சக முட்டாள்களுக்கு எனது இனிய முட்டாள் தின வாழ்த்துகள்.....

அப்படியே என்னோட பேஃவரைட் பாட்ட கேட்ருங்க........

இப்போ முதல்ல சொன்ன ஆச்சர்யம்....

1. மூளையே இல்லாத ஒருத்தன் மூளைக்கு ரெஸ்ட் கொடுக்க முடியுமா?

2.ஆச்சர்யம்னு சொன்ன உடனே கடைசிக்கு ஓடி வந்த உங்களை எதுல சேர்க்கிறது....ஹி..ஹி..வாங்க வந்து நம்ம ஜோதியில கலந்துக்கங்க

5 comments:

மங்கை said...

me the first..

நாங்க என்னைக்குமே மூளைக்கு வேலை குடுத்ததில்லை..

நாம முட்டாள்னு சொல்றதுக்கு இவ்வ்வ்வ்வ்வ்ளோஓஓஓ பெரிய எக்ஸ்ப்ளனேஷன் குடுக்கனுமா...

தமிழ் அமுதன் said...

///சக முட்டாள்களுக்கு எனது இனிய முட்டாள் தின வாழ்த்துகள்.....///

வாழ்த்துகளுக்கு நன்றி!!

///ஆச்சர்யம்னு சொன்ன உடனே கடைசிக்கு ஓடி வந்த உங்களை எதுல சேர்க்கிறது....ஹி..ஹி..வாங்க வந்து நம்ம ஜோதியில கலந்துக்கங்க ...///

;;)))

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

வாழ்த்துகளுக்கு நன்றி!!
(ஆச்சர்யம்னு சொன்ன உடனே கடைசிக்கு ஓடி வந்த உங்களை எதுல சேர்க்கிறது....ஹி..ஹி..வாங்க வந்து நம்ம ஜோதியில கலந்துக்கங்க ..)
பேஃவரைட் பாட்ட கேக்கலாம்னுபோய் பார்தா (This video has been removed due to terms of use violation. )ணூ வருதுங்கன்னா :(
ஏப்ரல் ஒன்ணும் நாணும்
இப்பிடியா ஏமாத்துறது :)))))))).

Sanjai Gandhi said...

:)

தேவன் மாயம் said...

நம்ம முட்டாள்ங்கிறது ஊரறிந்த விசயமாச்சே! நாங்க என்னைக்குமே மூளைக்கு வேலை குடுத்ததில்லை.
வாழ்த்துக்கள்!!!
தேவா.