வேறொன்றும் சொல்வதற்கில்லை....
வலிகள் பொதுவானவை....
பாரபட்சம் பார்ப்பதில்லை....
ம்ம்ம்ம்ம்....
கடந்து போகும் இன்னொரு
துன்பியல் நிகழ்வு....
துன்பியல் நிகழ்வு....
Tuesday, May 19, 2009
Posted by யட்சன்... at 10:29 AM 12 comments
கெட்ட செய்தி....தெளிவு படுத்துங்களேன்....
Sunday, May 17, 2009
இலங்கையிலிருந்து கெட்ட செய்தியொன்று இன்றைக்குள் வெளியாகலாமென நண்பரொருவர் சற்றுமுன் தொலைபேசினார். NDTV ல் கூட புலிகள் வசமிருந்த மக்கள் முற்றாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும். அதிபர் ராஜ பக்ஷே எந்த நேரத்திலும் முக்கியமான செய்தியினை அறிவிப்பாரெனவும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
விவரமறிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்...
கவலையாயிருக்கிறது....ம்ம்ம்ம்ம்
Posted by யட்சன்... at 12:23 AM 15 comments
நான் ரசித்த பெண்பதிவர்கள்...
Wednesday, May 13, 2009
நான் பதிவெழுத துவங்கிய காலத்தில் மதி கந்தசாமி, துளசி கோபால் மாதிரியானவர்கள்தான் பிரபலமான பெண் பதிவர்கள்...அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் பெண்பதிவர்கள் வரத்துவங்கினர்.
அந்த காலகட்டத்தில் துளசிகோபாலுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்குமளவுக்கு வெறித்தனமான பாசக்கார கூட்டமிருந்தது இப்போதைய புதியவர்களுக்கு தெரியாது. காலப்போக்கில் அதன் தீவிரம் குறைந்து போனது... தானாக நிகழ்ந்ததா இல்லை நிறைய பெண் பதிவர்கள் வந்த பின்னால் நீர்த்துப் போனதாவென தெரியவில்லை. நான் மதிக்கும் மிக மூத்த பதிவர் திருமதி. துளசி கோபால். அவரின் எழுத்துகளில் காணும் எளிமையும், யதார்த்தமுமே அவரின் வெற்றிக்கும், இத்தனை நாள் நிலைத்திருப்பதற்கும் காரணமென நினைக்கிறேன். திருவாளர் போலி டோண்டுவால் பாதிக்கப்பட்டவர்களில் அம்மையாரும் அடக்கம். வலையுலக மனோரமாவாய் இவரை கூறலாம்....பல பரிணாமங்களில் மிளிர்பவர்.
மதி கந்தசாமியின் எழுத்துக்களில் காணக்கிடைக்கும் சரளமான நடைபோக்கினை பின்னாளில் நான் காப்பியடித்திருக்கிறேன் என்றால் அது மிகையில்லை. அவர் சென்னை அன்னாநகரில் வசித்த காலகட்டத்தைய அனுபவங்களின் பதிவுகள் என்னுடைய ஆல் டைம் பேவரைட் பதிவுகளில் ஒன்றாக இருக்கிறது. தமிழ்மணம் உருவாக காரணமாயிருந்தவர்களில் இவரும் ஒருவர் என்பதும், பின்னாளில் தமிழ்மண நிர்வாகம் கைமாறிய போது புதிய குழுவில் அங்கம் வகித்தவரென்பதும் குறிப்பிட தக்கது.
ராமச்சந்திரன் உஷா....இவரின் ஆரம்பகால பதிவுகளில் இருந்து இவரை தொடர்ந்து வருகிறேன். வலையுலகத்துக்கு முந்தைய குழும எழுத்துக்களில் துவங்கியது இவரது எழுத்தாளர் பணி. முன்பெல்லாம் அடிக்கடி...நானும் ரவுடிதான்னு சொல்ற, வடிவேலு மாதிரி அப்பப்ப நானும் எழுத்தாளர்னு சொல்லிக்குவார். உண்மையில் அதற்கான உழைப்பு அவரிடமிருந்தது. வளைகுடாவிலிருந்த போதும் சரி பின்னர் சூரத்துக்கு மாறி வந்த பின்னரும் சரி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது அவரின் ஆக்கமொன்று புத்தகமாய் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது . இவர் வரையில் இது கொஞ்சம் கால தாமதமாக நடந்த ஒன்றாகவே நினைக்கிறேன்.
கவிஞர் மதுமிதா.....இவர் சராசரிகளில் இருந்து விலகியவர் என்பது அவரது பதிவுகளில் தெறிக்கும். சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றவர். ஒரு சமயத்தில் பதிவர்களை பற்றிய தகவல்களை புத்தகமாய் போடப்போவதாய் சொல்லி பதிவர்களின் விவரம் கேட்டார். ஆளாளுக்கு மாய்ந்து மாய்ந்து கொடுத்தனர். அது வேலைக்காவாது என்கிற தீர்க்க தரிசனம் எனக்கு தெரிந்ததால் நான் கொடுக்க வில்லை. அது புத்தகமாய் வந்ததா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.
மதுரா...அதிர்ச்சி வைத்தியமென்பார்களே அம்மாதிரியான எழுத்துக்கு சொந்தக்காரர். இவர் தனது பதிவினை அழித்துவிட்டார் என்பது வரலாற்று சோகம். காரணம் சில அநாமதேயங்கள். பின் நவீனத்துவமெல்லாம் இவரின் எழுத்துக்களுக்கு முன்னால் மண்டியிட வேண்டும். உண்மையான கட்டுடைப்பு அல்லது முகத்திலறைந்த எழுத்துக்கள் என்றால் அது இவரின் அடையாளம். அநாயசமாய் எல்லா எல்லைகளையும் தொட்டு மீளும் நடைக்கு சொந்தக்காரர். இவரின் ஆங்கில பதிவு மாத்திரம் தற்போது எஞ்சியிருக்கிறது. நான் பொறாமை பட்ட எழுத்து இவருடையது.
பொன்ஸ்....பரபரவென வலையுலகத்தில் பிரபலாமான பதிவர். நிறைய படிக்கிற ஒரு பதிவர். வலையுலக செயல்பாடுகளில் தன்னை முன்னிறுத்தியவர். பா.க.ச வின் நிறுவனர். ஜூனியர் துளசியாய் வருவார் என எதிர்பார்க்கப் பட்டவர். சில பிரச்சினைகளினால் இப்போது அமைதியாய் எந்த திரட்டியிலும் இனையாமல் பரபரப்பு சூழலில் இருந்து விலகி தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். இவரின் எழுத்துக்களில் மிளிரும் முதிர்ச்சியும், அதில் அவர் செய்யும் பரிசோதனைகளும் எனக்கு மிக பிடித்தமான ஒன்று.
மங்கை, ரொம்பவும் அப்பாவியாய் எழுத ஆரம்பித்து இன்றைக்கு சகலராலும் மதிக்கத்தக்க பதிவராய் செயல்படுகிறார். இவருக்கு இவர் சார்ந்த துறை தவிர வேறெதுவும் எழுதத் தெரியாது என்பது மாதிரியாய் அது தொடர்பான பதிவுகளையே இடுபவர். கடந்த இரண்டு வருடங்களில் இவரின் எழுத்து பிரம்மிக்கத் தக்க வகையில் மெருகேறியிருக்கிறது. இவரின் துறை சார்ந்த புத்தகம் ஒன்றினை இவர் எழுதிட வேண்டுமென்பது என்னுடைய எதிர்பார்ப்பு. பதிவுகளை உருப்படியான காரணத்திற்கு பயன்படுத்திடும் பதிவர். இவர் நம்ம தோஸ்த்து, அதுனால அவர் பதிவில் அதிகமாய் கலாய்த்திருந்தாலும் பெருந்தன்மையாய் என்னை விட்டு வைத்திருக்கிறார்.
கயல்விழி முத்துலட்சுமி....அல்லது ஜூனியர் பொன்ஸ் அல்லது ஜூனியர் துளசி. வீட்டின் கடைக்குட்டி சகோதரி மாதிரியான உரிமையும் கலகலப்புமான எழுத்து இவருடையது. இவரின் பயண கட்டுரைகள் அது தரும் விவரிப்புகள் என் மாதிரியான ஆட்களுக்கு வயிற்றெரிச்சலை தருபவை. வலையுலகின் பல தளங்களில் சிறப்பான பங்களிப்பு தரும் திறமைசாலி இவர்.
காட்டாறு.....இவரை ஜூனியர் மதுரா என்பேன். அவரளவிற்கு காரமில்லா விட்டாலும் துணிச்சலான எழுத்துக்காரர். என் அறிவிற்கு எட்டிய வரையில் வலையுலகில் இவர் ஒரு காதல் கவிதை ஸ்பெஷலிஸ்ட். வேலைப் பளு இவரை எழுதவிடாமல் செய்கிறது என நினைக்கிறேன்.
தமிழ்நதி....போகிற போக்கில் காற்று இறகை ஏந்திச்செல்வது போல நம்மையும் மிதக்கவைத்துவிடும் மாயாஜாலம் இவரது எழுத்துக்களில்....வாக்கியங்களை கட்டமைப்பதில் இவரின் நேர்த்தி அசாத்தியமானது...ஸ்கூல் பையன் வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்வதைப்போல இவரின் வாக்கியங்களை திரும்ப திரும்ப படித்துப் பார்த்து அதிசயித்திருக்கிறேன். தன் இயல்புக்கு மாறாய் சென்னை செந்தமிழில் இவர் ஒரு பதிவு எழுதியிருக்கிறார், படித்துப் பாருங்கள், மொழியின் மீதான அவரின் ஆளுமை புலப்படும். இவருக்காகவாவது இலங்கையில் நிலமை சீரடைய வேண்டுமென பல முறை யோசித்திருக்கிறேன். அத்தனை சோகம் ஊடாடுகிறது இவரின் எழுத்துக்களில்....ம்ம்ம்ம்ம்
டாக்டர்.டெல்ஃபின் விக்டோரியா.....பெரிய போலீஸ் அதிகாரியின் அதிகாரி(பாஸ்!)....மளமளவென எழுதியவர் திடீரென வேலை நிமித்தமாய் எழுதுவதை குறைத்து விட்டார். துறை சார்ந்த விடயங்களை எளிமையாய் விவரிக்கின்றன இவரது பதிவுகள்.
இந்த அளவில் முடித்துக் கொள்வோம், இதற்காக மற்ற பெண் பதிவர்கள் என் மீது கோவிக்க வேண்டாம். என்னை மிகவும் பாதித்தவர்களை பட்டியலிட்டிருக்கிறேன் அவ்வளவே....யாரையாச்சும் விட்ருக்கேனா தெரியலை, அப்படி யாராவது உரிமையா வந்து திட்டினா கால்ல விழுந்துர்றேன் என்பதை தெரிவித்துக் கொண்டு இந்த பதிவினை இந்த அளவில் முடிக்கிறேன்.
Posted by யட்சன்... at 6:58 AM 20 comments
காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது ? - Exit polls முடிவுகள்
Exit Poll Source | BJP | CONGRESS | THIRD FRONT | OTHERS |
Headlines Today | 180 | 191 | 38 | 134 |
India TV | 194 | 195 | 108 | 46 |
News X | 191 | 199 | 104 | 48 |
Congress | 168 | 205 | - | 164 |
BJP | 220 | 170 | - | 153 |
Posted by யட்சன்... at 6:56 AM 2 comments
ஓடி வருகிறான் உதய சூரியன்.....
நான் தி.மு.க காரன் இல்லை...
ஆனா இந்த தடவை தி.மு.க வுக்கு ஓட்டு போட்டுட்டேன்...
அதுனால தி.மு.க ஜெயிக்கும்னு நினைக்கிறேன்....
தி.மு.க தோத்தாலும் கவலை இல்லை...சந்தோசம்தான்.
ஏன்னா அம்மா ஜெயிச்ச அடுத்த நிமிசம் இலங்கைக்கு ராணுவத்த அனுப்பி தமிழீழம் அமைச்சுக் கொடுத்துருவாங்கல்ல....
வாழ்க ஜனநாயகம்....
Posted by யட்சன்... at 3:02 AM 9 comments
அப்படி ஏதும் நடந்துவிடுமா...?
Sunday, May 10, 2009
வலையுலகில் உணர்ச்சிபிழம்பாய் கொதித்துப் போயிருக்கும் அநேக தமிழ்பதிவர்களை ப்ற்றி அவருக்கு தெரிந்திருக்குமா என தெரியவில்லை. இதையெல்லாம் அறியாமல் சோனியா அவர்கள் இந்த தன்மான் சிங்கங்களின் குகைக்குள்ளேயே வருக்கிறார். என்னவொரு அசட்டுத்தனம்....ம்ம்ம்ம்
அநேகமாய் இந்த தமிழ் பதிவர்கள் எல்லோரும் சோனியா வரும் வழியில் அல்லது பொதுக்கூட்டத்தில் ஏதாகிலும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்...ஏனெனில் அவர்களின் பதிவில் அத்தகனை காரமும், வீரமும் இருந்தது.
ஜெயா டிவியில் இவர்களின் போராட்டத்தினை நேரலையாக காட்டுவார்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவே அந்த அலைகாட்சியினை தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நாளைய செய்திதாள்களில் நமது பதிவர்களின் வீரதீர பிரதாபங்களை படித்து மகிழ்வோம் என்கிற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்கிறேன்.
பின்குறிப்பு : இனி எவரும்(நான் உட்பட) இவர்கள் ஏசி ரூமில் ஓசி கண்ணியில் பதிவிடும் வாய்ச்சொல் மண்ணிக்கவும் படங்காட்டும் பதிவுலக வீரர்கள் என யாரும் சொல்லமுடியாது.
Posted by யட்சன்... at 1:41 AM 5 comments
