போதும் நிறுத்திக்குவோம்....!

Tuesday, July 28, 2009

அநேகமாய் நான் எழுதும் கடைசி பதிவாய் இது இருக்கலாம்....

ஆரம்பத்தில் ஒரு வித போதையாலும், பின்னர் புதிய வெளி ஒன்றில் தொடர்ச்சியாய் புத்திசாலியாய் காட்டிக் கொள்ள நினைத்த முனைப்புமாய் கடந்த காலங்களில் யோசித்து யோசித்து எழுதியிருக்கிறேன். எழுதியதை படிக்கும் போது ஒரு நேர்கோடான கர்வமும், மெல்லிசான திமிரும் எனக்கு்ள் இழையோடியதை ரசித்திருக்கிறேன்.

பிடித்தது எழுதினேன்..இப்போது அத்தனை பிடிப்பில்லை....

கடந்த ஆண்டுகளில் செய்து வந்த கண்ணாமூச்சி விளையாட்டிலும் அத்தனை ஆர்வமில்லை...

சிலர் பிரயோசனமாயிருக்கிறது என கருதுவதால் எனது வர்த்தக பதிவுகளை மட்டும் தொடர்ச்சியாக இயக்குவதாயும், தனிப்பட்ட பதிவுகளை இத்துடன் நிறுத்திக்கொள்வதாயும் முடிவெடுத்திருக்கிறேன்.

எனது பெயரில் வரும் பின்னூட்டங்களை இனி அனுமதிக்க வேண்டாம். அவை என்னுடையதில்லை.

இந்த முடிவுக்கு பின்னால் வருத்தமெல்லாம் இல்லை...அயற்சியே...

என்றும் அன்புடன்..

-யட்சன்



7 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(

Senthil kumar. R said...

:( :( :(

Anonymous said...

எழுதவே கூடாதுன்னுல்லாம் முடிவெடுக்க வேணாம் எப்பவாச்சும் போர் அடிச்சா சும்மா ஒரு போஸ்ட் தட்டி விடுங்க. :)

அவ்ளோதான்

சிம்பா said...

அனானி அன்பர் சொல்வதை நானும் வரவேற்கிறேன். தாங்கள் என்றாவது ஒரு நாள் தன பதிவிடுகிறீர்கள். அதனை தொடர்ந்து செய்வதால் எந்த வித அயர்ச்சியும் ஏற்ப்பட போவதில்லை.

மேலும் பதிவு போதை அவ்வளவு எளிதாக விலகி விடாதே... அடிக்கடி வராட்டியும் அப்போ அப்போ வந்து போங்க குரு..

மங்களூர் சிவா said...

:(

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in