சிரித்தவன் அழுகிறேன்....

Friday, January 30, 2009




நன்றி அய்யா...

உமது ரசிகன் என சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளும்...

-யட்சன்

முட்டாள் குமரனும் சில முழு பூசனிக்காய்களும்....

தமிழுணர்வாளர்களின் வெறும் வாய்க்கு அவலாய் போனதை தவிர அந்த இளைஞனால் எதை சாதிக்கமுடிந்ததென தெரியவில்லை. இயலாமையின் உச்சத்தில் கவன ஈர்ப்பாய் செய்ததை தியாகமென சொல்வதை காட்டிலும் தற்கொலையென்றே வரையறுக்கலாம்.தற்கொலைகள் மன்னிக்க முடியாதது.....

சாகும்வரை உண்ணாநிலையெடுத்தவர்கள், கள்ளத்தோணியேறியவர்களுக்கில்லாத இன உணர்வினை இந்த இளைஞர் எங்கிருந்து பெற்றார்?...நிதர்சனங்களை மீறிய மூளைச்சலவை இத்தகைய முடிவுகளுக்கு இட்டுச்சென்றிருக்கலாம்தான்...ஆனால் இத்தகைய சலவையாளர்கள், கொழுக்கட்டை கொழுக்கட்டையாய் எந்த சேதாரமுமில்லாமல் நேற்றைக்கும், இன்றைக்கும் ஏன் என்றைக்குமிருப்பார்கள் என்பதை அந்த இளைஞர் உணராமல் போனதை என்னென்பேன்.

விடுதலைப்புலிகளின் செயல்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தும் போக்கினை யார் துவங்கினார்களென தெரியவில்லை, ஆனால் இன்றைக்கும் அதே வரையரையாய் போனதுதான் இத்தனை அனர்த்தங்களுக்கும் காரணாயிருக்குமென நினைக்கிறேன்.விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதென்று எதுவுமில்லாத நிலையில்...விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவமில்லாதவர்களின் எதிர்வினைக்கு பயந்து முப்பது வருடங்களுக்கு மேலாய் புனிதபதாகையினை புலிகளுக்கு தந்த என் தமிழினமும் குற்றவாளிதான்.

அடிப்படை நேர்மையில்லாத இரண்டு சுயநலவாதிகள் கணக்குத்தீர்ப்பதின் இன்னொரு அத்தியாயமே இன்றைய இலங்கை நிலவரம்.உண்மையில் இதன் பாதகங்கள் அனைத்துமே ஏதுமறியாத அப்பாவி பொதுமகனும் அவன் பிள்ளை குட்டிகளுக்கும்தான்...இந்த இழப்புகளுக்கும், வேதனைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய குற்றவாளிகள் ராஜபக்‌ஷேவும், பிரபாகரனும்தான்.

’துன்பியல் நிகழ்வு’ என்பது அலங்கார பூசிமெழுகல் வார்த்தையில்லை, அதன் வலியும் வேதனையும் எத்தனை கொடூரமானது என்பதை தெரிந்து கொள்ள புலிகள் மிகப்பெரிய விலை கொடுத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை....

இலங்கையின் அரசியல்வாதிகளுக்கு புத்தி வர முப்பதாண்டுகள் ஆகியிருக்கிறது, இந்தியா மாதிரியான பிராந்திய வல்லரசின் துனையில்லாமல் பயங்கரவாதத்தினை அழித்தொழிக்கமுடியாது என்பதை உணர்ந்ததன் விளைவே தற்போதை வெற்றிகள்.மிகவும் தீர்க்கமான திட்டமிடலும், நேர்த்தியான செயல்பாடுமே வலுவான ஒரு எதிரியினை முடக்க முடியும். இதை இலங்கை,இந்தியா மாதிரியான துனையுடன் சாதித்துக் காட்டியிருக்கிறது என்பதுதான் உண்மை.

எதிரியினை குறைவாக மதிப்பிட்டதும், தனது திறமை மீது அதீத தற்பெருமை கொண்டிருந்ததும்தான் இன்றைய புலிகளின் பின்னடைவுக்கு காரணமாயிருந்திருக்கும்.இந்தியா மாதிரியான ஒரு அண்டை சக்தியினை நட்புடன் கையாளத்தெரியாததும் இன்னொரு பின்னடைவு, வைக்கோ மாதிரியான அட்டைக்கத்தி வீரர்களை நம்பாமல் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,சுர்ஜீத் சிங்க் மாதிரியான செயல்வீரர்களை எளிதில் அனுகும் வாய்ப்பிருந்தும் அதை ஏன் கோட்டைவிட்டார்கள் என்பது எனக்கு இன்னமும் பிடிபடாதது.

குற்றம் குறைகளை சுட்டிய நான் அதற்கான எனது தீர்வுகளை அடுக்காமல் போனால் நான் ஒருதலைபட்சமானவனாய் தீர்மானிக்கப்படுவேன், எனக்கு அதில் உடன்பாடில்லை.நடந்தது நடந்து விட்டது, இனி நடந்ததை பற்றி பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.உண்மையிலேயே ஈழத்தமிழர்களுக்கு நிம்மதியான அரசியல் தீர்வொன்று கிடைக்குமானால் அது தமிழகத்திலிருக்கும் அரசியல் வாதிகளால் ஆகாது, ஆனால் தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறானே அந்த சாமானிய தமிழனால் மட்டுமே முடியும்.

தற்போதைய சூழலில் புலிகள் என்பதுகளின் துவக்கத்தில் தமிழக ஆதரவினை திரட்ட எத்தகைய பிரச்சார உத்தியினை மேற்கொண்டார்களோ அத்தகைய செயல்பாடொன்றினை மிகத்தீவிரமாய் தமிழக்த்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவசெய்தல் அவசியம், என்ன அன்றைக்கு ஆளும் அரசின் ஆதரவிருந்தது, இன்றைக்கு அத்தனை வெளிப்படையான ஆதரவில்லைதான், ஆனாலும் கலைஞர் நிச்சயம் உதவுவார்.ஈழத்தமிழனின் அவலத்தினை உணர்ச்சிவயமில்லாமல், நிதானமாய் மூலைமுடுக்கெல்லாம் வேதனையான பக்குவத்தில் கொண்டு சேர்க்கும் வல்லமை திருமாவளவனிடம் இருக்கிறது.வடமாவட்டங்களில் இதை ராமதாஸை கொண்டு சாதிக்கலாம்.

தூங்கிவழியும் தமிழன் சிலிர்த்தெழுவார்களேயானால், காங்கிரஸ் அடிப்பொடிகள் வாயையும்,மற்றதையும் பொத்திக்கொண்டு காணாமல் போய்விடுவர், பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் வேளையில் ஓட்டுக்காகவாவது மத்திய அரசு இலங்கை அரசினை தற்காலிகமாய் முடக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் என்பது திண்ணம். இந்த அவகாசத்தில் அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு புலிகள் தங்களை தயார்செய்து கொள்வதும் பிரச்சினையின் தீர்வுக்கு அவசியமான அவசியம்.

விடுதலைபுலிகள் சில தியாகங்களுக்கு தயாராக வேண்டிய அவசியம் வந்திருக்கிறது, அவர்கள் போராடும் தமிழர்களுக்காக இதை செய்துதானாக வேண்டும்...செய்வார்களா?

இத்தாலியின் கண்ணகி !

Wednesday, January 28, 2009



புகார் கண்ணகியின் கோபத்தால்...

எரிந்தது மதுரை !

இத்தாலிய கண்ணகியின் மௌனத்தால்...

எரிகிறது தமிழ் ஈழம்ம்ம்ம்ம்ம்ம்

கோவலன்கள் யோக்கியமாய் இருக்க வேண்டிய அவசியமில்லை போலும் !

வாழிய கற்பின் திறன் !

இனி காங்கிரஸார் பொங்கல் வைத்து கொண்டாடலாம்!

ஹேப்பி பர்த்டே வாத்யாரே....!

Saturday, January 17, 2009



மருதூர் கோபாலமேனன் ராமசந்திரனுக்கு இன்று 93 வது பிறந்தநாள்...

இப்படிச்சொன்னால் எத்தனைபேருக்கு தெரியும்....

ஏழைகளின் இதயதெய்வம்(நன்றாக கவனிக்கவும்”ஏழைகளின்”), பொன்மனச்செம்மல்,மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இன்று பிறந்தநாள். அநேகமாய் தேர்தல் சமயங்களில் மட்டுமே நினைக்கப்படும் அளவிற்கு சுருக்கபட்டு விட்ட ஒரு மனிதனின் பிறந்த நாள்.

அரசியல் எம்.ஜி.ஆரை எனக்கு எப்போதுமெ பிடித்ததில்லை, ஆனால் ஒரு நடிகராய் அவரின் தீவிர ரசிகனென சொல்லிக்கொள்வதில் எனக்கு எப்பொழுதுமே ஒரு புளகாங்கிதமிருந்ததுண்டு. மிகச்சிறந்த நடிகரென அவரை சொல்லிவிடமுடியாது, ஆனாலும் தேசிய விருதெல்லாம் வாங்கியிருக்கிறார். ஆனால் வேறெந்த பொழுதுபோக்குமில்லாத அன்றைய சூழலில் உழைத்துக் களைத்துவரும் சாமான்யனை வேரோடும் தூரோடும் மகிழ்வித்த கலைஞர்.

தன் படங்களில் எப்போதும், தன்னை எப்பொழுதும் ஒரு மகாமனிதனாய் காட்டிக்கொண்டதில்லை, சாமனியனின் குரலாய் ஒலித்ததில்தான் அவரது வெற்றியிருந்திருக்க வேண்டும். அவரின் கவர்ச்சியும், ஆளுமையும் இன்றைய கதாநாயகர்களிடம் தேடினாலும் கிடைக்குமா சந்தேகமே....

இன்றைக்கும் அவரின் படங்களை பார்ப்பது ஒரு சந்தோஷ அனுபவமே....

ஹேப்பி பர்த்டே...வாத்யாரே !

பொங்கல் வாழ்த்து ....மிஸ் பண்ணீராதீங்க!

Wednesday, January 14, 2009



பக்கத்துவூட்ல இழவு வுளுந்து கெடந்தாலும், ஊரெல்லாம் சந்தோசமா பொங்கலையும், புத்தாண்டையும் டீவி பொட்டியோட கொண்டாடறத பார்க்கும் போது எனது மனித நேயம் சிலிர்த்துப் போகிறது...

என்னை மாதிரி அசட்டுப்பயலுகதான் மனசு சரியில்லாம பண்டிகைய கொண்டாடாம வுட்ருக்கோம்....ம்ம்ம்ம்ம்

சத்தியமா சொல்றேன், நாட்டின் இறையாண்மைக்கு எதிரா ஏதும் எழுதலைங்ன்னா...!

எனிவே...ஹேப்பி பொங்கல் ட்யூட்ஸ்