வெட்கக்கேடு....

Wednesday, October 15, 2008

உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தும், தண்ணீர் தரமறுத்த கர்நாடகாவின் அடாத செயலை தட்டிக்கேட்டு கூண்டோடு ராஜினாமா செய்ய துப்பில்லாதவர்கள்....

முல்லைப் பெரியாற்றுப் பிரச்சினையில் கூண்டோடு ராஜினாமா செய்ய வக்கற்றவர்கள்....

கர்நாடகமெங்கும் சக தமிழன் விரட்டி விரட்டி அடிக்கப்பட்ட போது கூண்டோடு ராஜினாமா செய்யும் சொரணையற்றவர்கள்....

இப்போது கூண்டோடு ராஜினாமா செய்கிறார்களாம்...

வெட்கக்கேடு...

5 comments:

தமிழ் அமுதன் said...

பதவிக்காலம் முடிய போகிறது! அதுதான் முக்கிய காரணம்! இன்னும் சில வருடங்கள் பதவிக்காலம் இருந்தால் இப்படி சொல்லுவார்களா ?

சிம்பா said...

இதெல்லாம் இருந்தா நாங்க எதுக்கு அரசியலுக்கு வர்றோம்.

அப்பு போங்க அப்பு...

அறிக்கைகளும், அறிவிப்புகளும் இல்லாத அரசியலா.. சொன்ன மட்டும் செய்யவா போறோம், இத போய் சீரியஸ் ஆ எடுத்துக்கலாமா..

கடமை அழைக்கிறது, இன்னும் செய்ய வேண்டிய வேலை இருக்கு, நீங்க இப்படியெல்லாம் கோவப்படாம போய் பசங்களுக்கு அல்வா வாங்கி கொடுங்க.

ஏன்னா நாங்க அடிக்கடி அதான் குடுப்போம்...

மங்கை said...

ஒரே கோபமா காட்டமா எழுதி இருக்கீங்க...

ஓட்டுப் போடறவுங்க எல்லாரும் இப்படி யோசிக்க ஆரம்பிச்சா கொஞ்சமாவது மாற்றம் வர வாய்ப்பிருக்கு...

யட்சன்... said...

பதிவின் நோக்கம் திசைமாறும் வாய்ப்பினை எதிர்பார்த்தேன்....

ம்ம்ம்ம்ம்....

தமிழ்நதி said...

"பதிவின் நோக்கம் திசைமாறும் வாய்ப்பினை எதிர்பார்த்தேன்...."

நமக்கெல்லாம் ஒரேரேரே பார்வைதான்:) அதற்கப்பால் பார்ப்பதில்லை.