போலி டோண்டுவும் ஒரு புண்ணாக்கு பதிவும்

Thursday, July 24, 2008

போலி டோண்டு என அன்போடு(?) அழைக்கப்பட்ட திருவாளர். மூர்த்தி என்பவர் சென்னை சைபர்க்ரைம் போலீசாரின் வசமிருப்பதாகவும், அவருக்கெதிரான நடவடிக்கைகள் பற்றியும் பெரியவர் டோண்டு தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு பிடிக்காத அல்லது மாற்றுக்கருத்தாளர்களை எதிர்கொள்கிறேன் பேர்வழியென அவர் செய்த செயல்கள் யாவும் அருவெறுப்பானவை, தரம்தாழ்ந்தவை, தண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இப்போது அவர் முடக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியே...

இந்த பதிவின் நோக்கம் அவரின் வீழ்ச்சியை அறிவிக்கும் ஜெயபேரிகையோ அல்லது அதை தொடரும் கொண்டாட்டங்களோ இல்லை. வலைபதிவுகளில் நாலாண்டு காலத்திற்கு மேல் சுற்றி வருபவன் என்கிற முறையிலும், ஒரு சக பார்வையாளனாய் என்னுடைய சில எண்ணங்களை சொல்வதே இப்பதிவு....

திரு.மூர்த்தி என்பவர் தமிழ்வலையுலக செயல்பாட்டின் முன்னோடிகளில் ஒருவர் என்பது பலருக்கு தெரிந்திருக்காது, முத்தமிழ்மன்றம் போன்ற குழுமங்களில் அவரின் பங்களிப்புகள் இருந்தது, இருக்கிறது. இத்தகைய மனிதரை போலி டோண்டுவாக மாற்றிய பெருமை, நம்முடைய மூத்த பதிவர் பெரியவர் டோண்டுவையே சாரும் என்பது நிஜத்திலும் நிஜம். இதை அவரும் மறுக்க மாட்டார், மறுக்கவும் முடியாது.

நம்முடைய மூத்த பதிவருக்கும் மூர்த்தியின் புதிய அவதாரம் தனது வலையுலக வளர்ச்சிக்கும், பரபரப்பிற்கும் தேவைபட்டதால்....அவரே மூர்த்திக்கு போலி டோண்டு என்கிற நாமகரணமும் செய்வித்து மூர்த்தியை கொம்பு சீவினார் .

திருவாளர் மூர்த்தியால், மிக மோசமாயும், கேவலமாயும் தாக்கப்பட்டவர் பெரியவர் டோண்டுவாகத்தானிருக்க முடியும். பாவம் அப்போதெல்லாம் அவருக்கு காவல்துறை அலுவலகம் எந்த திசையில் இருக்கிறதென தெரியாது போயிருக்கிறது. மூர்த்தியை தானே கண்டுபிடிக்கப் போவதாயும், அதற்கென யுக்தி, உத்தி என தன் சார்ந்த ஒரு குழுவினை உருவாக்கவும், அவர்களுக்கு பிதாமகனாய் செயல்பட்டு தனக்கு புகழ்தேடிக்கொண்டார் என்பதை அப்போதைய தமிழ் வலைப்பதிவின் பங்களிப்பாளார்கள் அனைவரும் அறிவர்.

தனக்கும் தான் சார்ந்தோருக்கும் ஏற்பட்ட இந்த பாதிப்புகளையும், அசிங்கங்களையும் ஏதோ தர்மயுத்தம் மாதிரியும், இவர் அதை காக்கப் புறப்பட்ட புரட்சியாளர் மாதிரியான பில்ட்டப்புகளினால், ஆத்திரத்தில் அறிவிழந்த மூர்த்தியும் பெரியவரின் பதிவுகளில் பின்னூட்டமிடும் சக பதிவர்களையும் வாசகர்களையும் குறிவைத்து வெறிநாய் போல விரட்டத்துவங்கினார்...இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது அப்பாவியான சக பெண் பதிவர்கள்தான்..... அதிலும் பிராமணர்கள் என தெரிந்தால் மூர்த்தியின் ஆபாசமும், அர்ச்சனையும் எல்லை மீறியது.

தனிமனிதனாய் சுற்றிக்கொண்டிருந்த மூர்த்தியை....குழுவாய் செயல்பட வைத்ததில் இந்த பெரியவருக்கு நிறையவே பங்குண்டு....எப்பொழுதெல்லாம் தன்னுடைய பதிவுகள் சுணங்குகிறதோ அப்போதெல்லாம் புதிய அஸ்திரம் ஒன்றை வெளிக்காட்டி....தனக்கும் போலி டோண்டுவுக்கும் விளம்பரம் தேடிக்கொண்டதில் இவருக்கு இனை யாருமில்லை.

அனானிகளை கேவலமாய் விமர்சித்துவந்த இந்த பெரியவர், டஜன் கணக்கில் போலி பதிவுகளை வைத்திருந்தார் என்பதும், கையும் களவுமாய் மாட்டி சந்தி சிரித்தபின்னர் இல்லாத குட்டிக்கரணம் போட்டது சரித்திரம். இவருடைய அடிப்பொடியொருவர், சக பெண் பதிவர் ஒருவரை பற்றி எழுதிய ஆபாசப்பதிவிட்டு, கையும் களவுமாய் மாட்டிக்கொண்டு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த போது, தனது சிஷ்யருக்காய் இவர் அடித்த சப்பைக்கட்டுகளும், சல்ஜாப்புகளும் இப்போது நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நகைச்சுவை காட்சிகள்.

இன்றைக்கு கூட மூர்த்தி முடக்கப்பட்டது, செந்தழல்ரவி, ஓசைசெல்லா போன்ற இளைய்வர்களால்தான் என்பதை மறந்து விடக்கூடாது.பாராட்டும் வாழ்த்துகளும் இந்த இளையவர்களுக்கே போய்ச்சேர வேண்டும். நம் பெரியவருக்கு மூர்த்தியை முடக்கும் எண்ணம் எக்காலத்திலும் இருந்ததில்லை....போலி டோண்டு இல்லாவிட்டால் தான் காணாமல் போய்விடுவோம் என்பது மாதிரியான நினைப்பில், தொடர்ச்சியாய் அதைச்செய்கிறேன்...இதைச்செய்கிறேன் என சவடால் விட்டுக்கொண்டே, மலிவான விளம்பரங்களுக்காய் மூர்த்தியின் திருவிளையாடல்களை ஊக்குவித்தார் என்பதுதான் உண்மை.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல் அவசியம்தான்....ஆனால் குற்றவாளியை தொடர்ந்து குற்றம் செய்ய தூண்டியவரை என்ன செய்யலாம்.இப்போதைக்கு இவ்வளவுதான். இதற்கு மேல் எழுதினால் கோபத்தில் என்ன எழுதுவேன் என்று தெரியாது.(முந்தைய வரி எந்த பதிவிலிருந்தும் காப்பியடிக்கப்படவில்லை...நானே எழுதியதாக்கும் :-) )

மிக முக்கியமான அடிக்குறிப்பு :

1. பெரியவரின் திறமை மற்றும் தன்னம்பிக்கை மீது எனக்கு எப்போதும் அசாத்தியமான மரியாதை உண்டு.

2. திரு.மூர்த்தி, காலத்தின் கட்டாயத்தால் மட்டுமே தன்னுடைய பதிவுகளில் மன்னிப்பு கடிதமிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவர் திருந்திவிட்டதாக நான் நம்பவில்லை.

3.தனிமனித விமர்சனங்களுக்கும், தனிமனித தாக்குதல்களுக்குமான வித்தியாசங்களை பதிவர்கள் இந்த சூழலிலாவது உணர்தல் அவசியம்.

4. அனைவரும் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வது அவசியம்.

58 comments:

Anonymous said...

நானும் உங்களைப் போலவே இந்தப் பிரச்சினையின் ஆரம்பித்திலிருந்தே கவனித்து வந்தவன் என்ற முறையில் உங்கள் பதிவு, பின்குறிப்புக்களுடன், மிகச் சரி என உடன்படுகிறேன்..

யாத்ரீகன் said...

:-) very well said and true on those last 3 points...

SurveySan said...

///மலிவான விளம்பரங்களுக்காய் மூர்த்தியின் திருவிளையாடல்களை ஊக்குவித்தார் என்பதுதான் உண்மை.
//

இதில் உண்மை இருப்பதாய் தெரியவில்லை. கேவலமான குற்றச்சாட்டு இது?
யாராவது, தன் குடும்பத்தாரை பற்றி கேவலமாய் எழுத மற்றவரை ஊக்குவிப்பார்களா?

//4. அனைவரும் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வது அவசியம்.//

என்னங்க கொடுமை இது? தல கீழ ப்ரச்சாரம் பண்றீங்க? இந்த மாதிரி விஷயங்களுக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் எதிர்ப்பதுதான் சாலச் சிறந்தது.


இத்த இப்படியே, புஸ்ஸ்ஸ்னு அமுங்க விடுவதுதான், எல்லோருக்கும் நல்லது. தூசு தட்டி, ஆராய ஆரம்பித்தல் நலமல்ல ;)

Anonymous said...

வெல் செட் !!! எக்ஸலண்ட் !!!!

ரவி

Anonymous said...

ஆரியப்போலியின் வாக்குமூலத்தை சைபர் கிரைம் பிரிவில் "அந்த" பதிவர் கொடுக்கவேண்டும்...

பொன்னான பதிவர் உடனே ஒரு மின்னஞ்சல் கம்ப்ளைண்ட் அல்லது நேரடி கம்ப்ளைண்ட் கொடுக்கவேண்டும்...

ஆரியப்போலியும் இப்போதே உள்ளே போவது தான் நல்லது...

Anonymous said...

//யாராவது, தன் குடும்பத்தாரை பற்றி கேவலமாய் எழுத மற்றவரை ஊக்குவிப்பார்களா?//

அப்படி டோண்டு ரவியை ஊக்குவித்ததாக தான் செந்தழல் ரவி ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார்.

டோண்டுவின் மனைவி, பெண்ணை பற்றி ஆபாசமாக எழுதி போலியின் நம்பிக்கையை பெற முயற்சித்தாராம் செந்தழல் ரவி.

இதுக்கு என்ன சொல்றீங்க மிஸ்டர் சர்வேசன்?

Anonymous said...

//
இத்த இப்படியே, புஸ்ஸ்ஸ்னு அமுங்க விடுவதுதான், எல்லோருக்கும் நல்லது. தூசு தட்டி, ஆராய ஆரம்பித்தல் நலமல்ல ;)//

ஆமாம். இன்னும் நோண்டினால் ராபின்ஹூட் என்ற மாயவரத்தான் மாட்டிகொள்வார்.

சர்வேசன் வேஷத்துலே அவர் தான் இப்போ நல்லவர் ஆயிட்டாரே ;)

அப்படியே உடுங்கப்பா

SurveySan said...

அனானி, பதிவில் சொல்லியிருக்கும் காரணம் இது

//////மலிவான விளம்பரங்களுக்காய் மூர்த்தியின் திருவிளையாடல்களை ஊக்குவித்தார் என்பதுதான் உண்மை.
////

இது தவறானதுன்னுதானய்யா சொன்னேன்.

அனானி2,

///ஆமாம். இன்னும் நோண்டினால் ராபின்ஹூட் என்ற மாயவரத்தான் மாட்டிகொள்வார்.

சர்வேசன் வேஷத்துலே அவர் தான் இப்போ நல்லவர் ஆயிட்டாரே ;)
///

;) ரூம் போட்டு யோசிக்கறீங்க.

நோண்டாம இருக்கணும்னு நான் சொன்னது, இன்னும் வழக்குகள் முடியலைன்னு படிச்சதால.
நோண்டரவங்க நோண்டுங்க, சைபர் மாமா கோச்சுக்காம பாத்துக்கங்க.
குட்டையை குழப்பாமல் விடுதல் நலம்.

Anonymous said...

// இவன் புத்தனுமில்லை..ஞானச் சித்தனுமில்லை...வெறும் பித்தன்!//

sathaym , 2m sokkan... avana neeyee :-)))

களப்பிரர் - jp said...

கலக்கல். மிக சரியாக சொல்லயுள்ளீர்கள்.

நானும் நேற்று இந்த கருத்தை ஒரு பதிவு எழுதினேன்.

http://tamilkuruthi.blogspot.com/2008/07/blog-post.html

களப்பிரர் - jp said...
This comment has been removed by the author.
Anonymous said...

சல்மா அயூப் மேட்டரில் ஜயராமனோடு டோண்டுவுக்கும் கூட்டு இருக்கலாம். அதனால் தான் பெயரிலியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிகொண்டிருக்கிறார்.

Anonymous said...

நல்லாச் சொன்னீங்க. இந்த நியாயவான் மூர்த்தியோட தொடர்பில் இருந்த கோவி.கண்ணனை எதிர்த்து பதிவிடுவார். பின்னர் மூணு மாசம் கழித்து சென்னையில் பதிவர் சந்திப்பு அப்படின்னு பதிவும் போடுவார்.

இவரோட தொழிலுக்கு விளம்பரம் தேட செலவில்லாத ஊடகம் இணையம், வலைப்பதிவுகள் என்பதை அறிந்து அடித்து ஆடுகிறார்.

Anonymous said...

உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே

கெணத்து தண்ணி இனிக்கிது
கடலு தண்ணி கரிக்கிது
நெறத்தில தான் ஒண்ணாகத் தெரியுது
கெணத்து தண்ணி இனிக்கிது
கடலு தண்ணி கரிக்கிது
நெறத்தில தான் ஒண்ணாகத் தெரியுது
எடுத்துக் குடிக்கும் போது பேதம் நல்லா புரியுது
எடுத்துக் குடிக்கும் போது பேதம் நல்லா புரியுது
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே

நத்தையிலே முத்திருக்கு நாகத்திலே நஞ்சிருக்கு
அத்தனையும் மண்ணுலதான் பொறக்குது
நத்தையிலே முத்திருக்கு நாகத்திலே நஞ்சிருக்கு
அத்தனையும் மண்ணுலதான் பொறக்குது
இன்னும் எத்தனையோ விதம் விதமா இருக்குது
இன்னும் எத்தனையோ விதம் விதமா இருக்குது
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே

காக்கையோடு வானத்திலே
கருங்குயிலும் பறக்கும் போது
பார்வையிலே ஒண்ணாகத் தோணுது
காக்கையோடு வானத்திலே
கருங்குயிலும் பறக்கும் போது
பார்வையிலே ஒண்ணாகத் தோணுது
குயிலு பாடும் போது காகம் ஓடி போகுது
குயிலு பாடும் போது காகம் ஓடி போகுது

உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே !


டோண்டு அவர்கள் சொல்வதை பார்த்தல் அது சரியாக இருப்பது போலுள்ளது.நீங்கள் (யட்சன்)சொல்வதும் சரி போலுள்ளது.


அதுக்கு இந்தப் பாட்டு சரிதான்

passerby said...

Dear Sir,

I broadly agree with your view that the punishment meted out to the person is inhuman.

If the case had gone to court, the court would definitely have looked into the aspect of his dependents etc. But, in this case, the punishment seems to have been meted out at police level.

This blogger by name Dondu Ragahvan is a retired person living in India, that too, in his home town Chennai. From his profile, I understand he is free from any onerous encumbrances. He therefore finds his blogging as an ideal post-retirement hobby. What a hobby it is! He abuses it to push up his caste, his Brahmanism etc. under the guise of learned discussions. He can afford to do that. We don’t call them into question.

He would not do all this, if he was in government service in CPWD. He would lose his job and his livelihood; and his dependents would be on the street! Please remember, there are so many people who are hurt by his views on caste, religion and other social issues!

The proper course for him, if he is a man of certain character associated with his age and experience, was to have contacted the accused Murthy in person or through trusted third parties, and sort out the problem himself.

No one is bad by birth. It is circumstances that make us what we are. And it is the same circumstances that can make us what we should be.

The elder man who all of you call aiyaa and Sir, if he is worthy of such honorifics, could have adopted the above course, that is to say, creating such circumstances that could change the accused for better. He will then sink into his grave with deep satisfaction of having changed a person for better. But, now, as things stand and have turned out to be, he will sink into his grave with the hurt feeling of having ruined a family of more than one person!

To err is human; to forgive is divine. Dondu Raagahvan has not appreciated this. Further, in his own religion, such a principle is strongly enjoined upon the followers, as the incident involving kuuresaalvaar shows: The alvaar’s eyes were gouged out by Kulothungan’s executioners. When asked what he had prayed to Sri Ranganaathar, the blind Kuuresar revealed to his guru Ramanujar that he had prayed to the Lord to forgive Kuloththungan and bless him! Ramanujar was taken aback at this, exclaiming: ‘Neerthaaneaiyaa unmaiyaana Vaishnavan!’

Dondu Raagahvan lives for his caste. A kutram, according to the sacred book he reads everyday:

மொழியைக் கடக்கும் பெரும் புகழான், வஞ்ச முக்குறும்பு ஆம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே

(சொற்களைக் கடந்த பெரும் புகழுடையவரும், கல்வி, செல்வம், குலம் ஆகிய மூன்று செருக்குகளாகிய, குறும்பைக் கடந்தவரும், நம் சுவாமியும் ஆன கூரத்தாழ்வான் திருவடிகளை அடைந்தபின், விளைவுகளை நீக்கும் இராமானுஜரின் புகழைப் பாடி, ஆத்மாவுக்கு எதிரான தீய வழிகளிலிருந்து
விலகி விட்டேன். இனி அடியேனுக்கு எல்லாம் எளிதே.)

Ippadikku

Karikkulam

Anonymous said...

naan intha pirachinaiyil oruvakaiyil sambathappattavan. unmaiyai chonnal poli and dondu both were rascals and fooled the entire tamil blogging community. Poor Moorthy is a neo paarpanar. he is proud of his cross belt. So original as usal went escaped and this fraud murthy caught in the police for his thimir.

One more thing. Dondu went only against those who attacked him. This idiot moorthy wanted to dominate every blogger worth the salt. So these behavior and pressure from a very high place resulted in moorthy's sad end. But he is a psycho! Moreover when cybercrime investigated the matter they found ppl from Chennai, Mumbai and UAE were involved in it. SO they may proceed further to nab all those who has a hand in this episode.

Anonymous said...

டோண்டு மீது தவறு இருப்பதாக தெரியவில்லை. ஆபாச தாக்குதலை நேர்கொண்டு அவர் செய்த போர் பாராட்டபட வேண்டியது.

மூர்த்தியோடு நேரடி தொடர்பிலிருந்த குழலி, கோவி கண்ணன் ஆகியோர் பிரச்சினை பெரிதானபோது மூர்த்தியை கைகழுவிவிட்டு விட்டார்கள்.

திராவிட தமிழர்கள் என்ற பெயரில் இயங்கிய அத்தனை பேருமே போலி டோண்டுவுக்கு அல்லக்கையாக செயல்பட்டவர்கள்.

ரவி போலியின் தீவிர அல்லக்கையாக இருந்ததுடன் டோண்டுவை பற்றி ஆபாச பதிவு எழுதியதும் எல்லோருக்கும் தெரியும். இன்று அந்த ரவியே போலி மீது குற்றம்சாட்டுவது வேடிக்கை வினோதம்.

Anonymous said...

////அப்படி டோண்டு ரவியை ஊக்குவித்ததாக தான் செந்தழல் ரவி ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார்.

டோண்டுவின் மனைவி, பெண்ணை பற்றி ஆபாசமாக எழுதி போலியின் நம்பிக்கையை பெற முயற்சித்தாராம் செந்தழல் ரவி.
////

இந்த பின்னூட்டத்தை மூர்த்தியை தவிர வேறு யாராலும் போட முடியாது :)))

டோண்டு அவர்களின் மனைவி மகள் புகைப்படம் டூண்டு தளத்தில் வெளியானது...

அந்த தளத்தின் ஆக்ஸஸ் மூர்த்தியை தவிர யாருக்கும் கிடையாது...

ஸ்பெஷல் ஆப்பு என்பதும் மூர்த்தியின் தளம்...

இதை மூர்த்தியே காவல் துறையினரிடம் எழுதி கொடுத்துள்ளான்.

அதிலும், டூண்டு தளம் உலகின் எந்த எந்த ஐ.பி முகவரியில் இருந்து ஆக்ஸஸ் செய்யப்பட்டது / எங்கே இருந்து திறக்கப்பட்டது / எந்த எந்த தேதியில் போஸ்ட் போடப்பட்டது என்று கூகிள் நிறுவனம் பி.டி.எப் கோப்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸாருக்கு அனுப்பி உள்ளது....

அதில் எந்த இடத்திலும் என்னுடைய ஐ.பி கிடையாது.

இதில் இருந்தே, டோண்டு, நான் மிகவும் மதிக்கும் துளசி டீச்சர் போன்றவர்கள் பற்றி எல்லாம் நான் எழுதவில்லை (இதை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கு பாருங்க, அவ்ளோ கேவலமா எழுத - என்னால சத்தியமா முடியாது)

அப்படி நினைப்பவர்கள் போலீசில் புகார் தரட்டும், நான் அதனை எழுதி இருந்தால் போலீஸ் என்னை கைது செய்யட்டும்...

மூர்த்தி தனக்கு வேலை போய்விட்டதாகவும், நான்கு மாதமாக தமிழ்நாட்டில் தான் இருப்பதாகவும் போலீஸில் சொல்வது பொய். இரண்டு வாரங்களுக்கு முன்புவரை மூர்த்தியின் ஐபியில் இருந்து எனக்கு ஹிட் வந்துகொண்டுள்ளது...

மேலும் சிம்பத்திக்காக மூர்த்தி சொல்லும் விஷயங்களையும் நம்ப முடியாது. அதெல்லாம் மலேசிய மானேஜர்கள் லீவு தருவதற்கு வேண்டுமானால் நம்பட்டும். நான் நம்ப முடியாது.

மூர்த்தி கொலை மிரட்டல் விடுத்த டேப் ஆதாரங்கள் உள்ளது. நான் இதன் மூலம் கிரிமினல் வழக்கு தொடரமுடியும். இன்றுவரை செய்யும் எண்ணம் இல்லை, இனி வரலாம்...

ஆகஸ்ட் இரண்டாம் தேதி மீண்டும் காவல் துறையினர் வரச்சொல்லியுள்ளார்கள் ( என்னுடைய தந்தையாரும் மூர்த்தியை சந்திக்க ஆவலாக உள்ளார். என்னுடைய பிறப்பை சந்தேகித்து மூர்த்தி எழுதிய விடயங்கள் குறித்து மூர்த்தியிடம் நேரடியாக விளக்கிவிடுவார் என்று நினைக்கிறேன்)

மேலும் மூர்த்தியால் பாதிக்கப்பட்ட பதிவர்கள் பலர் வர காத்திருக்கிறார்கள்...

என்னைப்போன்ற ஒரு சிலர் அவனை மன்னித்துவிட்டுவிடும் மன நிலையில் இருந்தாலும், சில பதிவர்கள், மூர்த்தி செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்ற நிலை எடுத்துள்ளனர்.

உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்...அது ஆரியப்போலியாக இருந்தாலும் திராவிடப்போலியாக இருந்தாலும்...

ஆகஸ்ட் இரண்டாம் தேதி எழும்பூர் குற்றப்பிரிவு , சைபர் கிரைம் அலுவலகத்தில் சந்திக்கலாம் வாருங்கள்....

Anonymous said...

டோண்டுவின் போலி டோண்டு பதிவில் போலி பொன்ஸ் ஜெயராமன் என்று உண்மைதமிழன் ஒப்புகொண்டிருக்கிறார். ஜெயராமனோடு கூட்டு களவாணியாக இருந்த டோண்டு மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மூர்த்தி சைபர் கிரைம் போலிசாரை வற்புறுத்த வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்று போலிசார் செயல்படமாட்டார்கள்.

முர்த்திக்கு என்ன தண்டனை கிடைக்குமோ அதே தண்டனை டோண்டுவுக்கும் கிடைக்கவேண்டும் என்பதில் தமிழ்வலைபதிவாளர்கள் எல்லோரும் உறுதியாக இருக்கிறார்கள்

Anonymous said...

//அப்படி நினைப்பவர்கள் போலீசில் புகார் தரட்டும், நான் அதனை எழுதி இருந்தால் போலீஸ் என்னை கைது செய்யட்டும்...//

மூர்த்திக்கு செந்தழல் ரவி டோண்டுவின் மகள் பற்றிய ஆபாசபதிவை மின்மடலாக அனுப்பியிருந்தால் அந்த ஆதாரத்தை மூர்த்தி நேர்மையாக காவல்துறையிடம் சமர்பிக்க வேண்டும்.

Anonymous said...

murthy, senthalal ravi, dondu moovarum thandikapada vendiyavarkale

Anonymous said...

//திராவிட தமிழர்கள் என்ற பெயரில் இயங்கிய அத்தனை பேருமே போலி டோண்டுவுக்கு அல்லக்கையாக செயல்பட்டவர்கள்.//

குறிப்பாக முத்து தமிழினி, லக்கிலூக், முத்துகுமரன், ஜோ, அருண்மொழி ஆகியோர்

தமிழ்மண நிர்வாகிகளில் தமிழ்சசி, கார்த்திக்ராமாஸ் இருவரும் போலிக்கு சொந்தகாரர்கள்

Anonymous said...

குழலி ஆரம்பகாலத்தில் போலிக்கு ஊதுகுழகாக இருந்தவர். ராபின்ஹூட் போலியின் முகமூடிகளை கிழித்தெறிந்தபோது போலிக்காக ராபினுடன் ஆவேசமாக சண்டைபோட்டது குழலியும், பொன்ஸும்

Anonymous said...

கிழவர் வாயை வெச்சுக்கிட்டு சும்மா இல்லாம ஜெயராமனையும், என்றென்றும் அன்புடன் பாலாவையும் போலிசில் மாட்ட வெச்சிடுவாரு போலிருக்கே? இவரை நம்பி விசாரணைக்கு வந்தா ரவி கதியும் அதோ கதிதான்.

Anonymous said...

///மூர்த்திக்கு செந்தழல் ரவி டோண்டுவின் மகள் பற்றிய ஆபாசபதிவை மின்மடலாக அனுப்பியிருந்தால் அந்த ஆதாரத்தை மூர்த்தி நேர்மையாக காவல்துறையிடம் சமர்பிக்க வேண்டும்.////

அனுப்பட்டும் அனுப்பட்டும்...மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் ?

ஸ்பெஷல் ஆப்பு தளத்தில் என்னுடைய பழைய மின்னஞ்சல் முகவரியை வைத்து புதிய தேதியில் (அறிவாளி) நான் மின்னஞ்சல் அனுப்பியது போல் வெளியிட்ட முட்டாள்தனம் போலீஸில் எடுபடுமா என்ன ?

Anonymous said...

//// Anonymous said...
கிழவர் வாயை வெச்சுக்கிட்டு சும்மா இல்லாம ஜெயராமனையும், என்றென்றும் அன்புடன் பாலாவையும் போலிசில் மாட்ட வெச்சிடுவாரு போலிருக்கே? இவரை நம்பி விசாரணைக்கு வந்தா ரவி கதியும் அதோ கதிதான்.

July 25, 2008 2:47 AM
////

இந்த பப்பு எல்லாம் வேகாது தம்பி. வரத்தான் போறேன்...

அன்றைக்கு நான் கொண்டுவரப்போகும் ஆதாரங்கள் உமக்கு தெரியத்தான் போகுது...

Anonymous said...

///ரவி போலியின் தீவிர அல்லக்கையாக இருந்ததுடன் டோண்டுவை பற்றி ஆபாச பதிவு எழுதியதும் எல்லோருக்கும் தெரியும். இன்று அந்த ரவியே போலி மீது குற்றம்சாட்டுவது வேடிக்கை வினோதம்.///

அதை ஒரு முகமிலி சொல்வதால் பதில் சொல்ல அவசியம் ஏதும் எனக்கு இல்லை...நெஞ்சிலே உரம் இருந்தால் சொந்த பெயரில் கேள்வி கேள்..

நேரடியாக பதில் சொல்கிறேன்...

Anonymous said...

////டோண்டுவின் போலி டோண்டு பதிவில் போலி பொன்ஸ் ஜெயராமன் என்று உண்மைதமிழன் ஒப்புகொண்டிருக்கிறார். ஜெயராமனோடு கூட்டு களவாணியாக இருந்த டோண்டு மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மூர்த்தி சைபர் கிரைம் போலிசாரை வற்புறுத்த வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்று போலிசார் செயல்படமாட்டார்கள்.

முர்த்திக்கு என்ன தண்டனை கிடைக்குமோ அதே தண்டனை டோண்டுவுக்கும் கிடைக்கவேண்டும் என்பதில் தமிழ்வலைபதிவாளர்கள் எல்லோரும் உறுதியாக இருக்கிறார்கள்////

யார் அந்த தமிழ் வலைப்பதிவர்கள் ? பிரவுசிங் செண்டரில் உட்கார்ந்துகொண்டு அனானி கமெண்டு போட்டுக்கொண்டிருக்கும் திருவாளர்.மூர்த்தியா ?

டோண்டு ஜெயராமனுக்கு வக்காலத்து வாங்க காரணம், இன்னும் அவர் ஜெயராமன் நல்லவர் என்று நம்புவதே...

மூர்த்தியாகிய உனக்கு எத்தனை பேர் வக்காலத்து வாங்கினார்கள் ? :)))

Anonymous said...

//ஸ்பெஷல் ஆப்பு தளத்தில் என்னுடைய பழைய மின்னஞ்சல் முகவரியை வைத்து புதிய தேதியில் (அறிவாளி) நான் மின்னஞ்சல் அனுப்பியது போல் வெளியிட்ட முட்டாள்தனம் போலீஸில் எடுபடுமா என்ன ?//

அதாவது பழைய தேதியில் மின்னஞ்சல் அனுப்பியது உண்மைதான் என்று திரும்பவும் ஒப்புகொள்கிறீர்கள்.

நான் அப்போ திருடனா இருந்தேன். அப்புறமா நல்லவனா மாறிட்டேன் என்று சொன்னாலும் திருடனா இருந்ததற்கு தண்டனை அனுபவித்து தான் ஆகவேண்டும் ரவி. விசாரணையின் போது குற்றவாளி கூண்டில் மூர்த்திக்கு அருகில் அமரவேண்டியவர்களில் நீங்களும் ஒருவர்.

Anonymous said...

///குழலி ஆரம்பகாலத்தில் போலிக்கு ஊதுகுழகாக இருந்தவர். ராபின்ஹூட் போலியின் முகமூடிகளை கிழித்தெறிந்தபோது போலிக்காக ராபினுடன் ஆவேசமாக சண்டைபோட்டது குழலியும், பொன்ஸும்///

அப்டியாங்னா ?

அதை ராபினே சொன்னால் நல்லாருக்கும்...நீயே சொன்னா ? ராபின் யார் என்று எனக்கு தெரியும்...உனக்கு தெரியுமா மூர்த்தி ?

Anonymous said...

//அன்றைக்கு நான் கொண்டுவரப்போகும் ஆதாரங்கள் உமக்கு தெரியத்தான் போகுது...//

மூர்த்தியும் தகுந்த ஆதாரங்களோடு வருவார் என்று நினைக்கிறேன் ரவி. அவர் வக்கீலோடு வந்ததாக டோண்டு பதிவில் படித்தேன். எனவே அவரும் முன்னெச்சரிக்கையாக இருப்பார். அவருக்கு ஒரு கண் போனாலும் உங்களுக்கு ரெண்டு கண்ணும் போகவேண்டியதில் உறுதியாக இருப்பார் என்று இத்தனை நாட்களாக கவனித்ததில் தெரிகிறது.


//டோண்டு ஜெயராமனுக்கு வக்காலத்து வாங்க காரணம், இன்னும் அவர் ஜெயராமன் நல்லவர் என்று நம்புவதே...//

இது தவறான வாதம் என்று உங்களுக்கே தெரியும் ரவி. டோண்டுவுக்கும், ஜெயராமனுக்கும் போலி பொன்ஸ் விவகாரத்தில் சரிபாதி தொடர்பு இருக்கிறது என்பதால் தான் டோண்டு ஜெயராமனுக்கு வக்காலத்து வாங்குகிறார்.

அப்பிரச்சினையின் போது ஜெயராமன் வாய்மூலமாக கொடுத்த வாக்குமூலத்திலும், எழுத்துமூலமாக கொடுத்த வாக்குமூலத்தில் டோண்டுராகவனின் பெயர் இடம்பெற்றிருப்பதால் தான் வாலறுந்த பல்லி போல இந்த விஷயத்தை தாண்டி செல்ல விரும்புகிறார்.

நீங்கள் நேர்மையானவராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சைபர் கிரைம் விசாரணைக்கு போகும்போது போலி பொன்ஸ் பதிவுக்கும், மூர்த்திக்கும் தொடர்பு இல்லை என்ற பட்சத்தில் ஜெயராமனை காவல்துறை விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்.

Anonymous said...

//அதை ராபினே சொன்னால் நல்லாருக்கும்...நீயே சொன்னா ? ராபின் யார் என்று எனக்கு தெரியும்...உனக்கு தெரியுமா மூர்த்தி ?//

ராபின் மாயவரத்தான்னு ஊருக்கே தெரியும். உங்களுக்கு தெரிந்திருக்காதா ரவி?

அருண்மொழி said...

//-) very well said and true on those last 3 points...

ஆங்.. அது

முதல் கருத்தில் உடன்பாடு இல்லையா :)

Anonymous said...

////மூர்த்தியும் தகுந்த ஆதாரங்களோடு வருவார் என்று நினைக்கிறேன் ரவி. அவர் வக்கீலோடு வந்ததாக டோண்டு பதிவில் படித்தேன். எனவே அவரும் முன்னெச்சரிக்கையாக இருப்பார். அவருக்கு ஒரு கண் போனாலும் உங்களுக்கு ரெண்டு கண்ணும் போகவேண்டியதில் உறுதியாக இருப்பார் என்று இத்தனை நாட்களாக கவனித்ததில் தெரிகிறது./////


மூர்த்தி வக்கீல்களோடு வந்தது தெரிந்தது தான், ஆனால் எதையும் சொல்லாமல் அல்லவா அழைத்துவந்து அவர்களும் கூனி குறுகினார்கள் ?

நானும் அனைத்து ஆதாரங்களையும் கொண்டு செல்லவிருக்கிறேன், நானும் காவல் துறையினரிடம் முழுமையாக பேசிவிட்டேன்...


//டோண்டு ஜெயராமனுக்கு வக்காலத்து வாங்க காரணம், இன்னும் அவர் ஜெயராமன் நல்லவர் என்று நம்புவதே...//

/////இது தவறான வாதம் என்று உங்களுக்கே தெரியும் ரவி. டோண்டுவுக்கும், ஜெயராமனுக்கும் போலி பொன்ஸ் விவகாரத்தில் சரிபாதி தொடர்பு இருக்கிறது என்பதால் தான் டோண்டு ஜெயராமனுக்கு வக்காலத்து வாங்குகிறார்.

அப்பிரச்சினையின் போது ஜெயராமன் வாய்மூலமாக கொடுத்த வாக்குமூலத்திலும், எழுத்துமூலமாக கொடுத்த வாக்குமூலத்தில் டோண்டுராகவனின் பெயர் இடம்பெற்றிருப்பதால் தான் வாலறுந்த பல்லி போல இந்த விஷயத்தை தாண்டி செல்ல விரும்புகிறார்.////


நான் அந்த வாக்குமூலத்தை கேட்கவில்லை, கேட்டபிறகு சொல்கிறேன்...


///நீங்கள் நேர்மையானவராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சைபர் கிரைம் விசாரணைக்கு போகும்போது போலி பொன்ஸ் பதிவுக்கும், மூர்த்திக்கும் தொடர்பு இல்லை என்ற பட்சத்தில் ஜெயராமனை காவல்துறை விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்.///

கண்டிப்பாக நன்பரே...அதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியையும் பெற்றுக்கொள்கிறேன்...

ஜெயராமன் தானாக முன்வந்து வாக்குமூலம் கொடுத்தார் என்று தெரியும்...

மேலும் இப்போது தானே போலிப்பதிவுகள் மூர்த்தியால் அழிக்கப்படுகின்றன, போலி பொன்ஸ் பதிவு மூர்த்தியால் உருவாக்கப்பட்டது என்றால் அது ஏன் அப்போதே அழிக்கப்படவேண்டும் ?

கண்டிப்பாக இந்த கேஸை விசாரிக்கும் அதிகாரியிடம் சொல்லி, போலி பொன்ஸ் பதிவை உருவாக்கியவரை சட்டத்தின் பிடியில் நிறுத்துகிறேன்...

தமிழ் வலைப்பதிவு ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று தானே இவ்வளவு பாடுபட்டேன் ?

என்னுடைய வலைப்பதிவான tvpravi.blogspot.com இல் இரண்டாவது பதிவு என்ன என்று பாருங்கள், உங்களுக்கே என்னுடைய நோக்கம் புரியும்...

Anonymous said...

பல தளங்களிலும் நடந்த விவாதங்களை கூர்ந்து கவனித்தபோது செந்தழல் ரவி, டோண்டு ராகவன் உள்ளிட்டோரும் நடுங்கும் நிலை ஏற்பட்டிருப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

போலிஸ் கேட்டுகொண்டதற்கு இணங்க முர்த்தி அவரது பதிவிலும், கருப்பு பதிவிலும் மன்னிப்பு கடிதம் போட்டிருக்கிறார்.

ஆனால் தேவையில்லாமல் குட்டை குழப்பி மீன் பிடிக்கும் நோக்கத்தில் டோண்டு ஒரு பதிவினை போட்டு இப்போது ஜெயராமன் பிரசினையை பெயரிலி கிளப்பி டோண்டுவுக்கு வக்காலத்து வாங்க வந்த செந்தழல் ரவியும் அம்மணமாகி நிற்கிறார்.

இந்த இழிபிறவிகளையெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால் முர்த்திக்கு கோவில் கட்டி கும்பிடலாம் :-)))))

Anonymous said...

//மேலும் இப்போது தானே போலிப்பதிவுகள் மூர்த்தியால் அழிக்கப்படுகின்றன, போலி பொன்ஸ் பதிவு மூர்த்தியால் உருவாக்கப்பட்டது என்றால் அது ஏன் அப்போதே அழிக்கப்படவேண்டும் ?//

நல்ல லாஜிக் ரவி. டோண்டுவுக்கும் இது தெரியும். இருந்தாலும் தன் தலையை தப்பவைக்க எந்த லிமிட்டுக்கும் டோண்டு போவார்.


//கண்டிப்பாக இந்த கேஸை விசாரிக்கும் அதிகாரியிடம் சொல்லி, போலி பொன்ஸ் பதிவை உருவாக்கியவரை சட்டத்தின் பிடியில் நிறுத்துகிறேன்...//

பாராட்டுகள் ரவி.

Anonymous said...

http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_17.html

இந்த பதிவை பாருங்கள், என்னுடைய இரண்டாவது பதிவு. 2006 ஏப்ரலில் போட்டது.

Anonymous said...

///இந்த இழிபிறவிகளையெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால் முர்த்திக்கு கோவில் கட்டி கும்பிடலாம் :-)))))///

அடுத்தவரின் மனைவி, தாய், குடும்பத்தினர் ஆகியவர்களை ஆபாச தளங்கள் மூலம் அருவருக்கத்தக்க வகையில் எழுதிய மூர்த்திக்கு நீங்கள் கோயில் கட்டுங்கள், உங்கள் சாயம் வெளுக்கும்...( ஸ்ப்லிட் பர்சனாலிட்டி சைக்கோ மூர்த்தியை தவிர வேறு யார் இதனை எழுதமுடியும் )

Anonymous said...

//இந்த பதிவை பாருங்கள், என்னுடைய இரண்டாவது பதிவு. 2006 ஏப்ரலில் போட்டது.//

அப்படியெல்லாம் பிளாக்கரில் துல்லியமாக சொல்லமுடியாது ரவி. இன்னைக்கு புதியதாக போடுகிற பதிவை கூட 2006 ஏப்ரலில் போட்டதை போல தேதி மாற்றி பதிவிடலாம். இதெல்லாம் ஒரு நம்பதகுந்த ஆதாரம் அல்ல :-))))))

Anonymous said...

//அடுத்தவரின் மனைவி, தாய், குடும்பத்தினர் ஆகியவர்களை ஆபாச தளங்கள் மூலம் அருவருக்கத்தக்க வகையில் எழுதிய மூர்த்திக்கு நீங்கள் கோயில் கட்டுங்கள்,//

செந்தழல்ரவி, மூர்த்தியீன் அந்த ஆபாச செயல்கள் கடுமையாக கண்டிகதக்கவையும், தண்டிக்கதக்கவையும் என்பதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை.

மூர்த்தியின் மனைவி படத்தை வலையேற்றி அவர் குடும்பத்தை ஆபாசமாக, வக்கிரமாக பேசிய உங்கள் குழு ஒன்றும் மூர்த்திக்கு குறைந்துபோய் விடவில்லை.

முன்பு போலிடோண்டு பதிவொன்றில் நீங்கள் மூர்த்தியை ஆபாசமாக பேசியதற்கு ஆதாரங்களை இட்டிருந்தார்கள். அந்த ஆதாரங்களையும் காவல்துறை பரிசிலிக்கும் என்று நம்புகிறேன்.

Anonymous said...

good

Anonymous said...

ellaarum amaithiyaga irukka, intha moorthikk ivvaLavu aavesamaka vakkalaththu vaanggupavar oru chennai pathivar enRu patchi solkiRathu

Darren said...

//இன்றைக்கு கூட மூர்த்தி முடக்கப்பட்டது, செந்தழல்ரவி, ஓசைசெல்லா போன்ற இளைய்வர்களால்தான் என்பதை மறந்து விடக்கூடாது//

oru moorthy inoru morthya pidikkira keavalatha enanau solrathu

Anonymous said...

//முன்பு போலிடோண்டு பதிவொன்றில் நீங்கள் மூர்த்தியை ஆபாசமாக பேசியதற்கு ஆதாரங்களை இட்டிருந்தார்கள். அந்த ஆதாரங்களையும் காவல்துறை பரிசிலிக்கும் என்று நம்புகிறேன்.////

போலியான ஆதாரங்கள் எத்தனை வேண்டுமானாலும் தயாரிக்கலாம்.

கிரெடிட் கார்டு நம்பர்கள் நான் அனுப்பியதாக கூட போட்டிருந்தது.

அதை நீங்கள் நம்புகிறீர்களா ? அப்படி ஒரு ஐ.டியே இல்லாதபோது அந்த ஐடியில் இருந்து எப்படி மின் அஞ்சல் போகமுடியும் ?

அனானியாக விளையாடும் உங்களிடம் என் நேரத்தை வீனடித்து என்னை நீரூபித்து ஒன்றும் ஆகப்போவதில்லை...

யார் நம்பவேண்டுமோ அவர்கள் நம்புகிறார்கள்...

தெருவில் புழுதி வாறி தூற்றிப்போகிறவர்களிடம் எல்லாம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க ஆரம்பித்தால் என்னாவது ?

தரன் போன்றவர்கள் தங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டிக்கொள்ள சந்தர்ப்பம் தேட அனானி ஆப்ஷன்களை உபயோகப்படுத்தக்கூடும்...

என்மீது உங்களுக்கு சந்தேகம், கோபம், பொறாமை, வெறுப்பு என்னிடம் கேளுங்கள்...நான் விளக்கம் சொல்கிறேன்...

நான் பதில் சொல்லாமல் இருந்தால் காவல் துறையினரிடரிடம் புகார் கொடுங்கள், நான் அங்கே வந்து உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்கிறேன்...

உங்கள் குற்றச்சாட்டு உண்மை என்றால் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்...

அதை விடுத்து, புழுதியை வாரி தூற்றாதீர்கள்...

நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள்...அந்த வலி எங்களுக்கு மட்டும் தான் தெரியும்...

சும்மா வேடிக்கை பார்க்கும் உங்களைப்போன்றவர்களுக்கு காமெடியாகத்தெரியும் விசயம், எங்களைப்போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சலை தரும் என்பது - நீங்கள் அந்த வலியை அனுபவித்தால் தான் தெரியும்...

என்னுடைய தாயாரை கேவலமான எழுதினான் மூர்த்தி..

என்னுடைய பிறப்பை அசிங்கப்படுத்தி எழுதினான் மூர்த்தி...

கிறிஸ்தவனாகிய நீ, திராவிடனா என்றும்,

துளசி கோபால் படத்தை போட்டு போலிப்பதிவு எழுதிய நீ என்றும்,

டோண்டுவின் மகள் படத்தை போட்டு போலிப்பதிவு எழுதியது நீ என்றும்,

பொய்யான குற்றச்சாட்டுகள் வைத்தான் மூர்த்தி..

பல பதிவர்கள் மூர்த்தியின் போலித்தளங்களிள் இருப்பது உண்மை என்று நம்பினார்கள்...

என்னை அழைத்து விளக்கம் கேட்கவில்லை...

என்னுடைய நன்மதிப்பு வீணானனது...

இனி ஒரு மூர்த்தி உருவாகக்கூடாது...

இனி இரு தரன், காழ்ப்பு கொண்டு எப்போடா சமயம் கிடைக்கும் செந்தழல் ரவியை வாரலாம் என்று நினைக்ககூடாது...

அதற்கு காவல் துறையின் மூலம் மூர்த்திக்கு கிடைக்கும் தண்டனை - அது சிறைத்தண்டனையோ - எச்சரிக்கையோ - பாடமாக இருக்கவேண்டும்...

இனிமேல் இங்கே விவாதம் செய்ய விரும்பவில்லை...

Anonymous said...

//oru moorthy inoru morthya pidikkira keavalatha enanau solrathu//

well said dharan

Anonymous said...

செந்தழல் ரவி கேட்கபடும் கேள்விகள் சரியானதாக இருந்தால் அது அனானியாக கேட்கபட்டால் என்ன, சொந்த பெயரில் கேட்கபட்டால் என்ன? கேள்விகளை கண்டு பயந்து ஓடுவதால் உங்கள் மீது சந்தேகம் எல்லோருக்கும் அதிகரிக்கும்.

Anonymous said...

டோண்டு பதிவில் போடப்பட்ட பின்னூட்டங்கள் ஒன்றொன்ராக குறைகிறதே? தேவை இல்லாமல் எதாவது வாயை விட்டுவிட்டாரா?

Anonymous said...

//ellaarum amaithiyaga irukka, intha moorthikk ivvaLavu aavesamaka vakkalaththu vaanggupavar oru chennai pathivar enRu patchi solkiRathu//

i have the same doubt. dondu is the master in these kind of sindumudithal.

dondu have the vegenance against senthalal ravi

Anonymous said...

//டோண்டு பதிவில் போடப்பட்ட பின்னூட்டங்கள் ஒன்றொன்ராக குறைகிறதே? தேவை இல்லாமல் எதாவது வாயை விட்டுவிட்டாரா?//

ஆமாம். அவர் வாய்விட்டதால் ஜயராமனும் மாட்டிகொள்வார் போலிருக்கிறது. டோண்டுவும் மூர்த்தியோடு உள்ளே போவது இல்லாமல் ஜயராமனையும் துணைக்கு அழைத்துகொண்டு தான் போவார்.

Anonymous said...

What are the other sites of our Dondu sir...i don't know about it.

Anonymous said...

//What are the other sites of our Dondu sir...i don't know about it.//

He don't have many sites, but he had more than 100 blogger ids. He commented vulgarly about periyarists in many fellow blogger posts.

Anonymous said...

வழக்கு விசாரணையில் இருக்கும்போதே தேவையில்லாமல் பதிவு போட்டு வாயை கொடுத்து பின்புறத்தை புண்ணாக்கி கொண்டுவிட்டார் டோண்டு

சீனு said...

//ஆகஸ்ட் இரண்டாம் தேதி எழும்பூர் குற்றப்பிரிவு , சைபர் கிரைம் அலுவலகத்தில் சந்திக்கலாம் வாருங்கள்....//

Is it! OK.

//நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள்...அந்த வலி எங்களுக்கு மட்டும் தான் தெரியும்...

சும்மா வேடிக்கை பார்க்கும் உங்களைப்போன்றவர்களுக்கு காமெடியாகத்தெரியும் விசயம், எங்களைப்போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சலை தரும் என்பது - நீங்கள் அந்த வலியை அனுபவித்தால் தான் தெரியும்...//

YOU ARE RIGHT.

யட்சன்... said...

இந்த பதிவின் நோக்கம்...யாருக்கும் வக்காலத்து வாங்கவோ,அல்லது யாரையும் காட்டிக்குடுக்கவோ எழுதப்படவில்லை....

அடுத்தவன் செய்தால் அது மஹாகுற்றம், அதையே தானோ அல்லது தன்னை சார்ந்தவர்களோ செய்தால் அதை யுக்தி, சாமர்த்தியம், சூழ்நிலை, பலிகடாவாக்கப்பட்டோம் என்பது, அல்லது அகப்பட்டவன் தலையில் அதையும் சுமத்துதல் போன்ற செயல்கள் நியாயம்தானா?

குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர் எத்தகையவராய் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே....

நாளை தமிழ்வலைப்பதிவுகளின் வரலாற்றினை புரட்டும் போது தவறான ஒரு தகவல் பதியப்பட்டு விடக்கூடாது என்பத்ற்காகவே மெனக்கெட்டு இந்த பதிவினை எழுத நேரிட்டது.

பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி...

Anonymous said...

//அப்படியெல்லாம் பிளாக்கரில் துல்லியமாக சொல்லமுடியாது ரவி. இன்னைக்கு புதியதாக போடுகிற பதிவை கூட 2006 ஏப்ரலில் போட்டதை போல தேதி மாற்றி பதிவிடலாம். இதெல்லாம் ஒரு நம்பதகுந்த ஆதாரம் அல்ல :-))))))//

there are ways to find that. you can call that as salmakutty sothanai

Anonymous said...

உண்மைத்தமிழன் அண்ணன்,
டோண்டுவும், நீங்களும், இன்னும் பலரும் மூர்த்தியால் பாதிக்கப்பட்டது உண்மை. அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. மகிழ்ச்சி. அதேபோல் வேறு சிலரால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களையெல்லாம் டோண்டு தாங்கிப்பிடிக்கிறார். நீங்கள் டோண்டுவுக்கு வால் பிடிக்கிறீர்கள்.

உங்களுக்கும், உலகத்துக்கும் தெரிந்த ஆபாசப் பேர்வழி 'சல்மா அயூப்' ஜெயராமனை பாதுகாக்க டோண்டு மேற்கொள்ளும் தகிடுத்தங்களைப் பாருங்கள். தன்னுடைய அரசியல் எதிரிகளைப் அவதூறுப் பிரச்சாரம் செய்துவந்த திருமலை டோண்டுவின் நல்ல நண்பராம். பலரை ஆபாசமாகத் தாக்கி எழுதி வந்த இணையக் குசும்பனும், அடாவடியாகத் தாக்கி எழுதிவந்த முகமூடியும் நல்ல பதிவர்களாம், டோண்டு சர்டிபிகேட் கொடுக்கிறார்.

இன்னும் டோண்டுவுக்கு வால் பிடித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் தன் தந்தைக்கே உபதேசம் செய்த முருக பெருமான் தான் விரைவில் அறிவுக்கண்ணை திறக்க வேண்டும்.

[இது போன்ற பின்னூட்டத்தை அனுப்பினால் டோண்டு வெளியிட மறுக்கிறார். அதற்கு முன் அனுப்பிய இன்னொரு பின்னூட்டத்தையும் வெளியிடவில்லை. எப்பவும் போல டோண்டுவிடம் தனக்கும், தன் நண்பர்களுக்கும் ஒரு நியாயம். பிறருக்கு ஒரு நியாயம். அருள் கூர்ந்து உங்கள் பதிவில் வெளியிட்டால் உண்மைத்தமிழன் அண்ணனும், மற்றவர்களும் படிப்பார்கள்.]

சக்திவேல் said...

உன்மைதான், நல்ல வலைப்பதிவராக இருந்த மூர்த்தி தடம் மாறிப்போனதுக்கு ஒரு சிலரின் ஆனவபோக்குதான். டோன்டு பெரியவரின் மேல் செய்யப்பட்ட தாக்குதலில் ஆரிய திராவிட விரோதமே தெரிந்தது ஆனால் ரவி மற்றும் ஓசை செல்லா இவர்களுடனான தாக்குதல்கள் தனிப்பட்ட சொந்த விரோதமே.

அந்த ஒரு சிலரின் ஆனவ போக்கு மாறாத வரையில் போலிகளின் அவதாரங்களும் மாறப்போவது இல்லை. doondu என்ற போலியாரின் வலைத்தளத்தில் மூர்த்தியின் மண்ணிப்பு பதிவு வர‌வில்லை என்பதிலேயே தெரியவில்லையா மூர்த்தி தவிற தலைமை போலியர் ருக்கிறார் என்று.

Anonymous said...

Good post and this mail helped me alot in my college assignement. Thank you on your information.