உடன்பிறப்பே....
கடந்த சில நாட்களாய் உன் அருமை கண்மணியாம் யட்சனின் பதிவினை தமிழ்மணதிரட்டியில் இனைக்க இயலாததன் சதி இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தமிழமண திரட்டியார் தங்களின் அளவுகோலுக்கு அருகே வராத பதிவுகளை தூக்கியெறிய போகிறோமென அறிவித்த போதுகூட நாம் அப்பாவியாய் அவர்களின் பதிவுக்குச் சென்று சென்று நம் பதிவினை இனைக்க முடியாத சோகத்தை அங்கே முறையிட்டிருந்ததை நீ அறிவாய்.
இதன் பொருட்டு நம் அடைப்பலகையையும் இரண்டொரு முறை மாற்றியதும், அதனால் நீ பட்ட சிரமமும் நாளைய வரலாறு கூறும் செய்திகளானதை நான் எப்படி மறப்பேன். என்னுடைய நுட்ப அறிவினை நீ சந்தேகிக்கிறாயோவென என்னி அதன் பொருட்டு சோதனை பதிவாய் ஃப்ரான்ஸ் தேசத்து அதிபரின் அழகிய மனையாளின் திருவுருவப் படத்தினை உனக்கு காட்டிட என்னி இனையமெங்கும் அலைந்து திரிந்து, உருண்டு புரண்டு உலகே வியக்குமந்த பெருமாட்டியின் அழகினை உனக்கு கொண்டு வந்து சேர்த்ததாய் அகமகிழ்ந்திருந்தேன்.
அதன் பின்னரும் இனைக்க இயலாமல் போகவே இது நம் மாற்றாரின் சதியாக இருக்குமோவென எண்ணி ஐயம் தெளிய தமிழ்மணத்தாருக்கு மின்னஞ்சலொன்று வரைந்தேன். அந்த மின்னஞ்சலை உன் பார்வைக்கு வைக்கிறேன்....படித்துப்பார் அதில் ஏதும் பிழையிருக்கிறதாவென.....
அன்புடையீர்,
எனது தமிழ் வலைபதிவான
http://yatchan.blogspot.com கடந்த ஒரு வருடமாய் தமிழ்மண திரட்டியினால் திரட்டப்படுகிறது. கடந்த சில நாட்களாய் எனது பதிவில் இருக்கும் தமிழ்மணபட்டியினை காணக்கிடைக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக பதிவினை தமிழ்மணத்தில் இனைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. இதனையடுத்து வேறு பல அடைபலகைகளை மாற்றியும் அதில் தமிழ்மண பட்டி தொடர்பான குறியீடுகளை இனைத்த போதிலும் இந்த சிக்கல் நீடிக்கிறது.
தவறு என் பக்கதிலிருக்கிறதா அல்லது தமிழ்மண திரட்டி எனது பதிவினை திரட்டுவதில் இருந்து விலக்கி வைத்திருக்கிறதா என்பது குறித்தான தங்களின் விளக்கம் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்....
அன்பன்
சரவணக்குமார் (யட்சன்)
இதற்கான பதிலும் உடனடியாக வந்தது....
யட்சன்,
மன்னிக்கவும். அண்மைய மாற்றங்களின், முடிவுகளின் படி, உங்கள் பதிவும் தமிழ்மணத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.
-செல்வராஜ்.
தமிழ்மணத்திலிருந்து விலக்கியிருக்கிறார்களாம், இந்த ஒரு வரியினை முன்னமே எழுதியிருந்தால் உன் அருமை கண்மணியாம் யட்சன் அடைப் பலகைகளோடு போராடியிருக்க வேண்டாம். அழகிய பெருமாட்டியின் படம் தேடி அலைந்திருக்க வேண்டாம். நமது கடிதத்தில் நமது பதிவினை விலக்கியிருக்கும் பட்சத்தில் அதற்கான காரண்த்தை கேட்டிருந்தோம்....அது நமது பண்பு ஆனால் அவர்களின் பதில் நறுக்குத் தெறித்தார் போல விரோதம் கொண்டவனின் மடலாய் இருப்பதை பார்த்து நீ எத்தனை வேதனைப்படுவாய் என்பதை என்னால் உணரமுடிகிறது.
இத்தகைய ஒரு பதில் எனக்கு எத்தனை கோபத்தை வரவழைத்திருக்கும் என்பதை நீ உணர்ந்திருபபர்ய், ஆனால் நாம் பண்பாடு தவறாதவர்கள், அடிப்படை நாகரீகம் தெரிந்தவர்கள், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுன்டு என நம்புபவர்கள். அதனால் நான் அவர்களுக்கு இப்படியொரு பதில் மடல் அனுப்பியிருக்கிறேன்.
தங்களின் உடனடி பதிலுக்கு நன்றி....
எனது பதிவு எதனடிப்படையில் தங்கள் திரட்டியினால் விலக்கிவைக்கபடுகிறது என்பதை விளக்கிடும் பெருந்தன்மை உங்களுக்கு இல்லாவிடினும், அதை தெரிந்து கொள்ளும் ஆவலுமெனக்கு இப்போது எழவில்லை.
நான் தங்களின் மேலான அளவுகோலுக்குள் உட்படாத நிலையில் தொடர்ந்து எனது மற்ற பதிவுகளை உங்கள் திரட்டியில் இனைத்திருப்பது உங்களின் மேன்மைமிகு செயல்பாட்டிற்கு இடைஞ்சலாயிருக்குமென கருதுகிறேன்.
எனவே பங்குச்சந்தை தொடர்பான எனது நுட்ப பதிவினை உடனடியாக தங்கள் திரட்டியிலிருந்து நீக்கி விடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். எனது பங்கு வணிகம் தொடர்பான வலைப்பதிவின் முகவரி
http://panguvaniham.wordpress.com
எனவே தயை கூர்ந்து எனது வேண்டுகோளினை ஏற்று எனது பங்கு வணிகம் பதிவினை தங்கள் திரட்டியிலிருந்து விலக்கி அதை எனக்கு உறுதிப்படுத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
கடந்த நான்காண்டுகளாய் எனது பதிவினை தங்கள் திரட்டியில் இனைத்திருந்தமைக்கு நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
மு.சரவணக்குமார் (யட்சன்)
இப்போது நீ எத்தகை உணர்ச்சிப் பிழம்பாயிருபபாய் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நாம் கடந்து வந்த பாதையில் எவரையும் இழிவாய் பழித்து திட்டியதில்லை, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு எவர் வீட்டு சுவற்றிலும் கிறுக்கியதில்லை. ஆபாசமாய் அர்ச்சித்ததில்லை....நமக்கு சரியென பட்டதை சனநாயக முறையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். இதை உணராத தமிழ்மணத்தார்....நமது வளர்ச்சியினை முடக்கும் விதத்தில் இத்தகைய செயலினை செய்திருப்பர் என நம்புகிறேன்.
நமது மடலுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் நமது பதிவுகளை இனி அவர்கள் திரட்டுவதில்லை என்கிற உறுதிமொழியினை எதிர்பார்க்கிறேன். நமது பயனுள்ள பணி தொடருமென்பது உனக்கும் எனக்கும் தெரிந்தால் போதும்.
இறுதியாக ஒரு வேண்டுகோளினை உன் பாதம் பணிந்து கேட்கிறேன், தட்டமாட்டாயென்கிற உரிமையில் கேட்கிறேன்....இந்த பாதக செயலை என்னி மனம் வருந்தி, கொதித்தெழுந்து மாற்றாரை அவதூறு செய்திடும் வகையில் எந்த வொரு காரியத்தையும் செய்யமாட்டேன் என்கிற உறுதிமொழியினை நீ எனக்கு தந்திடல் வேண்டும்.
இனி அவர்கள் நம் வழியில் இல்லை, நாம் நமது வழியில் தொடர்கிறோம்.....அவர்களுக்கு வாழ்த்தி விடைகொடுப்போம்.
வாழ்க தமிழ்....வளர்க இங்கிலீஷ்.....
-யட்சன்